• Oct 07 2024

இணைய வழி நிதி மோசடி - இலங்கையில் சிக்கிய 40 வெளிநாட்டவர்கள்!

Chithra / Oct 7th 2024, 7:37 am
image

Advertisement

 

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்களை நேற்று காலை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 30 சீனர்கள், 4 இந்தியர்கள் மற்றும் 6 தாய்லாந்து பிரஜைகள் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹாவில் உள்ள ஹோட்டல் மற்றும் ஹங்வெல்ல தனியார் நிறுவனமொன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தடயவியல் பரிசோதனைக்காக 499 கைத்தொலைபேசிகள், 25 மடிக்கணினிகள் மற்றும் 29 டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இணைய வழி நிதி மோசடி - இலங்கையில் சிக்கிய 40 வெளிநாட்டவர்கள்  இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்களை நேற்று காலை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 30 சீனர்கள், 4 இந்தியர்கள் மற்றும் 6 தாய்லாந்து பிரஜைகள் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.கம்பஹாவில் உள்ள ஹோட்டல் மற்றும் ஹங்வெல்ல தனியார் நிறுவனமொன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, தடயவியல் பரிசோதனைக்காக 499 கைத்தொலைபேசிகள், 25 மடிக்கணினிகள் மற்றும் 29 டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement