• Sep 30 2024

கொழும்பு நகரில் ஆபத்தான நிலையில் உள்ள 558 மரங்கள்..!Samugammedia

Tamil nila / Dec 16th 2023, 6:35 pm
image

Advertisement

கொழும்பு நகரில் 100 வருடங்களுக்கு மேற்பட்ட 558 மரங்கள் ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் (CMC) ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

330 மரங்கள் மட்டுமே ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, 558 மரங்கள் ஆபத்தானவை என கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் 214 மரங்கள் சிஎம்சியின் தலையீட்டின் மூலம் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

“மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில், கொழும்பில் அதிக மரங்கள் உள்ளன மற்றும் சில மரங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இந்த மரங்களை பாதுகாக்கும் முயற்சியில் கிளைகளை வெட்டி மரங்களை சமப்படுத்த கொழும்பு மாநகர சபை பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

“ஆபத்தான மரங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள மரங்களைத் தவிர, கொழும்பு நகரில் உள்ள ஏனைய மரங்களும் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளன.கொழும்பு கறுவாத்தோட்டம், கிரிகோரி வீதிக்கு அருகாமையில் உள்ள பாரிய மரம் ஒன்று குறுக்கே விழுந்ததால், கொழும்பில் மரங்கள் விழுவது தொடர்பில் மீண்டும் பேசப்பட்டது. 

முன்னரும் கொழும்பில் பல வீதிகளுக்கு குறுக்கே பல மரங்கள் வீழ்ந்துள்ளன” என ஆணையாளர் ஜயவர்தன தெரிவித்தார்


கொழும்பு நகரில் ஆபத்தான நிலையில் உள்ள 558 மரங்கள்.Samugammedia கொழும்பு நகரில் 100 வருடங்களுக்கு மேற்பட்ட 558 மரங்கள் ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் (CMC) ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.330 மரங்கள் மட்டுமே ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, 558 மரங்கள் ஆபத்தானவை என கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் 214 மரங்கள் சிஎம்சியின் தலையீட்டின் மூலம் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.“மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில், கொழும்பில் அதிக மரங்கள் உள்ளன மற்றும் சில மரங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இந்த மரங்களை பாதுகாக்கும் முயற்சியில் கிளைகளை வெட்டி மரங்களை சமப்படுத்த கொழும்பு மாநகர சபை பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.“ஆபத்தான மரங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள மரங்களைத் தவிர, கொழும்பு நகரில் உள்ள ஏனைய மரங்களும் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளன.கொழும்பு கறுவாத்தோட்டம், கிரிகோரி வீதிக்கு அருகாமையில் உள்ள பாரிய மரம் ஒன்று குறுக்கே விழுந்ததால், கொழும்பில் மரங்கள் விழுவது தொடர்பில் மீண்டும் பேசப்பட்டது. முன்னரும் கொழும்பில் பல வீதிகளுக்கு குறுக்கே பல மரங்கள் வீழ்ந்துள்ளன” என ஆணையாளர் ஜயவர்தன தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement