• Apr 28 2024

தாய்லாந்தில் வேலைக்காக சென்ற 56 இலங்கையர்கள் மியன்மார் பயங்கரவாத குழுவின் பிடியில்..! வெளியான அதிர்ச்சித் தகவல்

Chithra / Dec 19th 2023, 3:08 pm
image

Advertisement



தாய்லாந்தில் வேலைக்காக சென்ற 56 இலங்கையர்கள் மியன்மாரை சேர்ந்த பயங்கரவாத குழுவொன்றிடம் சிக்குண்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப துறை வேலைகளிற்காக தாய்லாந்து சென்ற இலங்கையர்களே மியன்மார் பயங்கரவாத கும்பலிடம் சிக்குண்டுள்ளனர்.

மியன்மாரின் பயங்கரவாத குழுவின்  சைபர் குற்றங்களிற்கான பகுதியொன்றில் உள்ள முகாமில் இலங்கையர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத குழுவினர் இவர்களை சித்திரவதை செய்கின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களை விடுவிப்பதற்காக தலா ஒரு நபரிடமிருந்து 8000 அமெரிக்க டொலர்களை பயங்கரவாத குழுவினர் கோருகின்றனர்.

இது குறித்து அறிந்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கைதூதுவர்  தெரிவித்துள்ளார்.

மியன்மார் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் 32 பேரை விடுவித்துள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய 56 பேரையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள தூதுவர் சட்டவிரோதமான வழிமுறைகள் மூலம் இலங்கயைர்களை மியன்மார் அல்லது தாய்லாந்திற்கு செல்ல முயலவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தாய்லாந்தில் வேலைக்காக சென்ற 56 இலங்கையர்கள் மியன்மார் பயங்கரவாத குழுவின் பிடியில். வெளியான அதிர்ச்சித் தகவல் தாய்லாந்தில் வேலைக்காக சென்ற 56 இலங்கையர்கள் மியன்மாரை சேர்ந்த பயங்கரவாத குழுவொன்றிடம் சிக்குண்டுள்ளனர்.தகவல் தொழில்நுட்ப துறை வேலைகளிற்காக தாய்லாந்து சென்ற இலங்கையர்களே மியன்மார் பயங்கரவாத கும்பலிடம் சிக்குண்டுள்ளனர்.மியன்மாரின் பயங்கரவாத குழுவின்  சைபர் குற்றங்களிற்கான பகுதியொன்றில் உள்ள முகாமில் இலங்கையர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.பயங்கரவாத குழுவினர் இவர்களை சித்திரவதை செய்கின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர்களை விடுவிப்பதற்காக தலா ஒரு நபரிடமிருந்து 8000 அமெரிக்க டொலர்களை பயங்கரவாத குழுவினர் கோருகின்றனர்.இது குறித்து அறிந்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கைதூதுவர்  தெரிவித்துள்ளார்.மியன்மார் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் 32 பேரை விடுவித்துள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.ஏனைய 56 பேரையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள தூதுவர் சட்டவிரோதமான வழிமுறைகள் மூலம் இலங்கயைர்களை மியன்மார் அல்லது தாய்லாந்திற்கு செல்ல முயலவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement