மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உணவு ஒவ்வாமையின் காரணமாக 78 மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 67மாணவர்கள் வீடு சென்றுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்போது எந்த ஆசிரியரும் பாதிக்கப்படவில்லையெனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்தன.
இன்று பகல் மட்டக்களப்பில் உள்ள புனித மைக்கேல் தேசிய பாடசாலை,கோட்டைமுனை கனிஸ்ட பாடசாலை,கல்லடி விநாயகர் வித்தியாலயம் ஆகியனவற்றிலிருந்து உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
திடீரென ஏற்பட்ட வாந்தி மற்றும் வயற்றுவலி காரணமாக மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேரடியாக பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களை வைத்தியசாலைக்கு செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
பகல் 12.30மணி வரையில் மட்டக்களப்பில் உள்ள புனித மைக்கேல் தேசிய பாடசாலையிலிருந்து 05 மாணவர்களும்,கல்லடி சித்திவிநாயர் வித்தியாலயத்திலிருந்து 30மாணவர்களும் கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்திலிருந்து 09மாணவர்களுமாக 44மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் தெரிவித்தார்.
எனினும் வைத்தியசாலையில் சுகாதார பிரிவினரால் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து பெற்றோரினாலும் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் மொத்தமாக 78 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும்
அவர்களில் 67மாணவர்கள் சிகிச்சை பெற்ற நிலையில் வீடு சென்றதாகவும் 06பேர் சிகிச்சைபெற்றுச் செல்லவுள்ளதுடன் 05 மாணவர்கள் சிறுவர் கண்காணிப்பு பிரிவு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன
இதேநேரம் புனித மைக்கேல் தேசிய பாடசாலை,கோட்டைமுனை கனிஸ்ட பாடசாலை,கல்லடி விநாயகர் வித்தியாலயம் ஆகியவற்றிற்கு ஒரு உணவு விநியோகஸ்தரே உணவினை தயாரித்து வழங்குவதாகவும் அவரின் உணவு தயாரிப்பு இடத்திற்கு சென்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் இ.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த உணவகத்தில் அதிகாலை 04மணிக்கு உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சூழல் தொடர்பிலும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் உணவு மாதிரிகள் பகுப்பாய்வு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் அது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னரே காரணம் தெரிவிக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.
நாளைய தினம் குறித்த உணவு விநியோகஸ்தருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உணவு ஒவ்வாமையினால் மட்டு. வைத்தியசாலையில் 78 மாணவர்கள் அனுமதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உணவு ஒவ்வாமையின் காரணமாக 78 மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 67மாணவர்கள் வீடு சென்றுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.இதன்போது எந்த ஆசிரியரும் பாதிக்கப்படவில்லையெனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்தன.இன்று பகல் மட்டக்களப்பில் உள்ள புனித மைக்கேல் தேசிய பாடசாலை,கோட்டைமுனை கனிஸ்ட பாடசாலை,கல்லடி விநாயகர் வித்தியாலயம் ஆகியனவற்றிலிருந்து உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.திடீரென ஏற்பட்ட வாந்தி மற்றும் வயற்றுவலி காரணமாக மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேரடியாக பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களை வைத்தியசாலைக்கு செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.பகல் 12.30மணி வரையில் மட்டக்களப்பில் உள்ள புனித மைக்கேல் தேசிய பாடசாலையிலிருந்து 05 மாணவர்களும்,கல்லடி சித்திவிநாயர் வித்தியாலயத்திலிருந்து 30மாணவர்களும் கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்திலிருந்து 09மாணவர்களுமாக 44மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் தெரிவித்தார்.எனினும் வைத்தியசாலையில் சுகாதார பிரிவினரால் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து பெற்றோரினாலும் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் மொத்தமாக 78 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 67மாணவர்கள் சிகிச்சை பெற்ற நிலையில் வீடு சென்றதாகவும் 06பேர் சிகிச்சைபெற்றுச் செல்லவுள்ளதுடன் 05 மாணவர்கள் சிறுவர் கண்காணிப்பு பிரிவு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தனஇதேநேரம் புனித மைக்கேல் தேசிய பாடசாலை,கோட்டைமுனை கனிஸ்ட பாடசாலை,கல்லடி விநாயகர் வித்தியாலயம் ஆகியவற்றிற்கு ஒரு உணவு விநியோகஸ்தரே உணவினை தயாரித்து வழங்குவதாகவும் அவரின் உணவு தயாரிப்பு இடத்திற்கு சென்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் இ.முரளீஸ்வரன் தெரிவித்தார்.குறித்த உணவகத்தில் அதிகாலை 04மணிக்கு உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சூழல் தொடர்பிலும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் உணவு மாதிரிகள் பகுப்பாய்வு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் அது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னரே காரணம் தெரிவிக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.நாளைய தினம் குறித்த உணவு விநியோகஸ்தருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.