• Jun 17 2025

தென்கிழக்குப் பல்கலையில் 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு!

shanuja / Jun 17th 2025, 11:02 am
image

தமிழ்நாடு சேலத்திலுள்ள பெரியார் அரசு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் திணைக்களமும்  இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நேற்று (15) இடம்பெற்றது. 


“முன்னேற்றம் பெற்றுள்ள இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தொழில் முனைவோர் செயற்பாடுகள், கலாசாரம், புதுமை, ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலமாக சமூக மாற்றமும் பொருளாதார மேம்பாடும்” எனும் தொனிப்பொருளில்  8ஆவது சர்வதேச மாநாடு இடம்பெற்றது. 


இதன்போது நிகழ்வின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஏற்பாட்டுக் குழுவின் செயலாளரும்  இந்தியாவின் தமிழ்நாடு சேலத்திலுள்ள பெரியார் அரசு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் திணைக்களத்தின்  பேராசிரியருமான கலாநிதி வி.ஆர் பழனிவேலு சிறப்பு உரையாற்றினார்.


இந்தியாவின் தமிழ்நாடு சேலம், காக்காப்பாளையம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆசோசியேட் பேராசிரியர் கலாநிதி ஆர். றமேஷ், ஆய்வரங்கு தொடர்பான அவதான உரையை ஆற்றினார். ஆய்வரங்கின் பிரதான உரையை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பேராசிரியர் கலாநிதி எம்.ஐ.எம். ஹிலால் நிகழ்த்தினார். இறுதியாக நிகழ்வில் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.

தென்கிழக்குப் பல்கலையில் 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு தமிழ்நாடு சேலத்திலுள்ள பெரியார் அரசு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் திணைக்களமும்  இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நேற்று (15) இடம்பெற்றது. “முன்னேற்றம் பெற்றுள்ள இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தொழில் முனைவோர் செயற்பாடுகள், கலாசாரம், புதுமை, ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலமாக சமூக மாற்றமும் பொருளாதார மேம்பாடும்” எனும் தொனிப்பொருளில்  8ஆவது சர்வதேச மாநாடு இடம்பெற்றது. இதன்போது நிகழ்வின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஏற்பாட்டுக் குழுவின் செயலாளரும்  இந்தியாவின் தமிழ்நாடு சேலத்திலுள்ள பெரியார் அரசு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் திணைக்களத்தின்  பேராசிரியருமான கலாநிதி வி.ஆர் பழனிவேலு சிறப்பு உரையாற்றினார்.இந்தியாவின் தமிழ்நாடு சேலம், காக்காப்பாளையம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆசோசியேட் பேராசிரியர் கலாநிதி ஆர். றமேஷ், ஆய்வரங்கு தொடர்பான அவதான உரையை ஆற்றினார். ஆய்வரங்கின் பிரதான உரையை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பேராசிரியர் கலாநிதி எம்.ஐ.எம். ஹிலால் நிகழ்த்தினார். இறுதியாக நிகழ்வில் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement