• May 13 2024

சாய்ந்தமருதில் சடலமாக மீட்கப்பட்ட 13 வயது சிறுவன்...! நீளும் மர்மங்கள்...!samugammedia

Sharmi / Dec 6th 2023, 2:00 pm
image

Advertisement

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் மர்மமான முறையில்  உயிரிழந்த  மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.


நேற்று இரவு(5) மாணவன் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்ட மத்ரஸா எனும் பாடசாலைக்கு அம்பாறை சிறப்பு தடயவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம்  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீனின்  விசாரணைக்கு பின்னர் குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் குறிப்பிட்டதை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இதே வேளை நேற்று இரவு கைதான குர்ஆன் மத்ரஸா நிர்வாகி பாதுகாப்பாக சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் புலன் விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் குடும்பத்தில்  மூத்தவரனான எனது மகன் கடந்த ஒக்டோபர் மாதம்  14 ஆம் திகதி குறித்த மத்ரஸாவில்  இணைந்ததாகவும் அவருக்கு  மாதம் ஒருமுறை 10 ஆயிரம் செலுத்தியதாகவும் இணைப்பு கட்டணமாக ருபா 25 ஆயிரம் செலுத்தியதாகவும்    2 மாதம் கூட  இன்னும் ஆகவில்லை  மௌலவி தொலைபேசி ஊடாக மகனின் சடலத்தை காண்பதாகவும் கண்ணீர் மல்க சிறுவனின் தந்தையார் குறிப்பிட்டார்.

செய்தியின் பின்னணி

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில் இன்று(5) இரவு  மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த   மாணவனே தவறான முடிவெடுத்து  உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.

இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி  சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

மேலும் குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது    தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை  மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால்   மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.




சாய்ந்தமருதில் சடலமாக மீட்கப்பட்ட 13 வயது சிறுவன். நீளும் மர்மங்கள்.samugammedia அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் மர்மமான முறையில்  உயிரிழந்த  மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.நேற்று இரவு(5) மாணவன் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்ட மத்ரஸா எனும் பாடசாலைக்கு அம்பாறை சிறப்பு தடயவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.அதனை தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம்  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீனின்  விசாரணைக்கு பின்னர் குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் குறிப்பிட்டதை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.இதே வேளை நேற்று இரவு கைதான குர்ஆன் மத்ரஸா நிர்வாகி பாதுகாப்பாக சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் புலன் விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.அத்துடன் குடும்பத்தில்  மூத்தவரனான எனது மகன் கடந்த ஒக்டோபர் மாதம்  14 ஆம் திகதி குறித்த மத்ரஸாவில்  இணைந்ததாகவும் அவருக்கு  மாதம் ஒருமுறை 10 ஆயிரம் செலுத்தியதாகவும் இணைப்பு கட்டணமாக ருபா 25 ஆயிரம் செலுத்தியதாகவும்    2 மாதம் கூட  இன்னும் ஆகவில்லை  மௌலவி தொலைபேசி ஊடாக மகனின் சடலத்தை காண்பதாகவும் கண்ணீர் மல்க சிறுவனின் தந்தையார் குறிப்பிட்டார்.செய்தியின் பின்னணிஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில் இன்று(5) இரவு  மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த   மாணவனே தவறான முடிவெடுத்து  உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி  சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.மேலும் குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது    தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை  மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால்   மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement