• Jun 01 2025

உறவினர் வீட்டுக்குச் சென்ற சிறுவன், பலியாகிய சோகம்- நடந்தது என்ன?

Thansita / May 31st 2025, 11:22 am
image

மொரகொட பொலிஸ் பிரிவின் முரியாகடவல பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த சிறுவன் நேற்றையதினம்  மாலை ஏரியில் நீந்தச் சென்றிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

களுத்துறை மொரோந்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 10 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

குறித்த சிறுவன் மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததாக மொரகொட பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மொரகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உறவினர் வீட்டுக்குச் சென்ற சிறுவன், பலியாகிய சோகம்- நடந்தது என்ன மொரகொட பொலிஸ் பிரிவின் முரியாகடவல பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த சிறுவன் நேற்றையதினம்  மாலை ஏரியில் நீந்தச் சென்றிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுகளுத்துறை மொரோந்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 10 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த சிறுவன் மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததாக மொரகொட பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மொரகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement