• Jun 25 2025

அரசியலமைப்புத் திருத்தமொன்று அவசியம்: ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரிடம் சஜித் வலியுறுத்து

Chithra / Jun 25th 2025, 12:42 pm
image


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தெளிவான மாற்றத்தைச் செய்ய வேண்டும். மேலும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் மூலம் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கை நேற்று (24) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

 நமது நாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகமாகும் என்பன ஊடாக யுத்தத்திற்குப் பிந்தைய காலத்திலான நல்லிணக்கம், நட்புறவு மற்றும் ஒற்றுமையை அடைய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, பெரும்பாலான அரசியல் கட்சிகள் உடன்படுகின்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தெளிவான மாற்றத்தைச் செய்ய வேண்டும். 

இதில் திருத்தத்தைக் கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி தமது ஆதரவை நல்கும். 

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் மூலம் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. 

இதிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நான்காவது தூணாக சுதந்திரமான ஊடகம் பாதுகாக்கப்பட வேண்டும்.

பொருளாதார, சமூக, மத உரிமைகள், அதேபோல் இன்று அடிப்படை மற்றும் மனித உரிமைகளாக இருக்கும் வாழும் உரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். 

தற்போதைய பொருட்களின் விலைகளால், மக்களின் வாழ்வாதாரம் கூட சீர்குலைந்துள்ளது. 

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மனித வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காகவும் ஐக்கிய மக்கள் சக்தி என்றும் முன்நிற்கிறது. என தெரிவித்தார்.


அரசியலமைப்புத் திருத்தமொன்று அவசியம்: ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரிடம் சஜித் வலியுறுத்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தெளிவான மாற்றத்தைச் செய்ய வேண்டும். மேலும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் மூலம் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கை நேற்று (24) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். நமது நாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகமாகும் என்பன ஊடாக யுத்தத்திற்குப் பிந்தைய காலத்திலான நல்லிணக்கம், நட்புறவு மற்றும் ஒற்றுமையை அடைய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.எனவே, பெரும்பாலான அரசியல் கட்சிகள் உடன்படுகின்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தெளிவான மாற்றத்தைச் செய்ய வேண்டும். இதில் திருத்தத்தைக் கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி தமது ஆதரவை நல்கும். நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் மூலம் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நான்காவது தூணாக சுதந்திரமான ஊடகம் பாதுகாக்கப்பட வேண்டும்.பொருளாதார, சமூக, மத உரிமைகள், அதேபோல் இன்று அடிப்படை மற்றும் மனித உரிமைகளாக இருக்கும் வாழும் உரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தற்போதைய பொருட்களின் விலைகளால், மக்களின் வாழ்வாதாரம் கூட சீர்குலைந்துள்ளது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மனித வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காகவும் ஐக்கிய மக்கள் சக்தி என்றும் முன்நிற்கிறது. என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement