• Jul 07 2024

முல்லை தேராவில் விவசாய பண்ணையில் இடம்பெற்ற வயல் விழா...!

Sharmi / Jul 4th 2024, 4:37 pm
image

Advertisement

முல்லைத்தீவு தேராவில் விவசாய பண்ணையில் 'வயல் விழா ' நேற்றையதினம்(03) இடம்பெற்றது.

இதன்போது, சிறு போகத்தில் உளுந்து பயிர்ச் செய்கையில் ஏற்படும் சித்திர வடிவ வைரஸ் நோய் தாக்கம் தொடர்பாக எவ்வாறான மாற்று நடவடிக்கைகளை கையாளலாம் என்பது தொடர்பாக செய்கை முறை விளக்கம் வழங்கப்பட்டதுடன், அங்கு மேற்கொள்ளப்பட்ட உளுந்து பயிர்ச்செய்கை தொடர்பாக செயன்முறை விளக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த விழாவில் மாகாண விவசாய பணிப்பாளர் செந்தில்குமரன் சுகந்தி, மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன் உள்ளிட்ட மாகாண அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு விவசாய திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


முல்லை தேராவில் விவசாய பண்ணையில் இடம்பெற்ற வயல் விழா. முல்லைத்தீவு தேராவில் விவசாய பண்ணையில் 'வயல் விழா ' நேற்றையதினம்(03) இடம்பெற்றது.இதன்போது, சிறு போகத்தில் உளுந்து பயிர்ச் செய்கையில் ஏற்படும் சித்திர வடிவ வைரஸ் நோய் தாக்கம் தொடர்பாக எவ்வாறான மாற்று நடவடிக்கைகளை கையாளலாம் என்பது தொடர்பாக செய்கை முறை விளக்கம் வழங்கப்பட்டதுடன், அங்கு மேற்கொள்ளப்பட்ட உளுந்து பயிர்ச்செய்கை தொடர்பாக செயன்முறை விளக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.குறித்த விழாவில் மாகாண விவசாய பணிப்பாளர் செந்தில்குமரன் சுகந்தி, மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன் உள்ளிட்ட மாகாண அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு விவசாய திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement