பிலியந்தலை, போகுந்தர பகுதியில் அமைந்துள்ள மர ஆலை ஒன்றில் இன்று காலை (04) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த மர ஆலை பிலியந்தலை - கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ளது.
தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பல தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினரின் உதவியைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
பிலியந்தலையில் மர ஆலையில் தீ விபத்து பிலியந்தலை, போகுந்தர பகுதியில் அமைந்துள்ள மர ஆலை ஒன்றில் இன்று காலை (04) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த மர ஆலை பிலியந்தலை - கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ளது.தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பல தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினரின் உதவியைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.