• Jun 09 2025

500,000 பெறுமதியுள்ள பஞ்சவர்ணக்கிளி திருட்டு - தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சம்பவம்

Chithra / Jun 8th 2025, 1:35 pm
image


தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நீலம் மஞ்சள் நிறம் கொண்ட பஞ்சவர்ணக் கிளியொன்று கடந்த 4 ஆம் திகதி இரவு திருடப்பட்டதாகக் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தெரியவந்துள்ளது. 

சுமார் 500,000 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுள்ள பஞ்சவர்ணக் கிளியே திருடப்பட்டுள்ளது. 

அந்த கூண்டில் 30 பஞ்சவர்ணக் கிளிகள் இருந்த நிலையில், அதிலிருந்து ஒரு கிளி காணாமற்போயுள்ளதாகக் கடமையிலிருந்த கூண்டின் பாதுகாவலர் தெரிவித்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக மிருகக்காட்சிசாலையின் நிர்வாகம் பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலமாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மிருகக்காட்சிசாலையில் விலங்கொன்று காணாமற்போனால் உயர் அதிகாரியே பொலிஸில் முறைப்பாடு செய்யவேண்டும். 

ஆனால் கிளி காணாமல் போனமை தொடர்பில் விலங்குகள் குறித்த அனுபவமற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலமாக முறைப்பாடு செய்யப்பட்டிருப்பது கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

500,000 பெறுமதியுள்ள பஞ்சவர்ணக்கிளி திருட்டு - தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சம்பவம் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நீலம் மஞ்சள் நிறம் கொண்ட பஞ்சவர்ணக் கிளியொன்று கடந்த 4 ஆம் திகதி இரவு திருடப்பட்டதாகக் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தெரியவந்துள்ளது. சுமார் 500,000 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுள்ள பஞ்சவர்ணக் கிளியே திருடப்பட்டுள்ளது. அந்த கூண்டில் 30 பஞ்சவர்ணக் கிளிகள் இருந்த நிலையில், அதிலிருந்து ஒரு கிளி காணாமற்போயுள்ளதாகக் கடமையிலிருந்த கூண்டின் பாதுகாவலர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மிருகக்காட்சிசாலையின் நிர்வாகம் பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலமாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மிருகக்காட்சிசாலையில் விலங்கொன்று காணாமற்போனால் உயர் அதிகாரியே பொலிஸில் முறைப்பாடு செய்யவேண்டும். ஆனால் கிளி காணாமல் போனமை தொடர்பில் விலங்குகள் குறித்த அனுபவமற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலமாக முறைப்பாடு செய்யப்பட்டிருப்பது கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement