யாழ் தென்மராட்சி மிருசுவிலில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று முன்தினம்(16) இடம்பெற்றுள்ளது.
மிருசுவில் சந்திக்கு அண்மையிலுள்ள மைதானத்தில் சந்தேகத்துக்கிடமான பொருளொன்று அடையாளம் காணப்பட்ட நிலையில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அது கைக்குண்டு என்று அடையாளம் கண்டு மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.