• Sep 17 2024

மாட்டுடன் மோதிய மோட்டார் சைக்கிள்- பரிதாபமாக உயிரிழந்த நபர்..!

Sharmi / Aug 14th 2024, 3:09 pm
image

Advertisement

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாத்தறை, திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை- கதிர்காமம் வீதியில் மாலியத்த பிரதேசத்தில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திக்வெல்லவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் சென்றுகொண்டிருந்த மாடு ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாட்டுடன் மோதிய மோட்டார் சைக்கிள்- பரிதாபமாக உயிரிழந்த நபர். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மாத்தறை, திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை- கதிர்காமம் வீதியில் மாலியத்த பிரதேசத்தில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திக்வெல்லவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் சென்றுகொண்டிருந்த மாடு ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.கொட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement