மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி சர்வக்கட்சித் தலைவர் மாநாட்டை நடத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.
அரசியல் செல்வாக்கு பலவீனமடையும் என்பதற்காக மாகாணசபைத் தேர்தலை நடத்தாமலிருக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
மாகாணசபை விவகாரத்தில் எதிர்கட்சிகளின் நிலைப்பாடு தற்போது ஒருமித்ததாக காணப்படுகிறது. ஆகவே தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதேவேளை மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் முழுமையாக, முறையாக பகிர வேண்டும். அல்லது ஒன்றும் செய்யாமலிருக்க வேண்டும். அதிகாரங்களை முறையாக பகிராமல் மாகாண சபைகள் வெள்ளை யானை என்று சித்தரிக்கப்படுவது முறையற்றது.
வலது கையில் அதிகாரத்தை வழங்கி இடதுகையில் பறித்த நிலையே காணப்படுகிறது. இது முறையற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயநிர்ணயம் தோற்றம் பெறும் என்று ஒரு தரப்பினர் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்த எடுத்துள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மாகாண சபைத் தேர்தல் சிக்கலுக்கு தீர்வு காண சர்வ கட்சித் தலைவர் மாநாட்டை நடத்த வேண்டும் - ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி வலியுறுத்தல் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி சர்வக்கட்சித் தலைவர் மாநாட்டை நடத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.அரசியல் செல்வாக்கு பலவீனமடையும் என்பதற்காக மாகாணசபைத் தேர்தலை நடத்தாமலிருக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. மாகாணசபை விவகாரத்தில் எதிர்கட்சிகளின் நிலைப்பாடு தற்போது ஒருமித்ததாக காணப்படுகிறது. ஆகவே தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.இதேவேளை மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் முழுமையாக, முறையாக பகிர வேண்டும். அல்லது ஒன்றும் செய்யாமலிருக்க வேண்டும். அதிகாரங்களை முறையாக பகிராமல் மாகாண சபைகள் வெள்ளை யானை என்று சித்தரிக்கப்படுவது முறையற்றது. வலது கையில் அதிகாரத்தை வழங்கி இடதுகையில் பறித்த நிலையே காணப்படுகிறது. இது முறையற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயநிர்ணயம் தோற்றம் பெறும் என்று ஒரு தரப்பினர் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார்கள்.இதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்த எடுத்துள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.