• Jul 27 2024

மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...!

Sharmi / May 24th 2024, 4:08 pm
image

Advertisement

மட்டக்களப்பில் கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று(23) இரவு இடம்பெற்றுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாங்கேணியைச் சேர்ந்த 41 வயதுடைய அனஸ்டன் ஹாரலஸ் அலேசியஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  



மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு. மட்டக்களப்பில் கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று(23) இரவு இடம்பெற்றுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.மாங்கேணியைச் சேர்ந்த 41 வயதுடைய அனஸ்டன் ஹாரலஸ் அலேசியஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்த நபரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement