• Oct 05 2024

சுகாதாரத்துறையை சீர்குலைக்கும் அரசியல் சதித் திட்டம்..! எச்சரித்த வைத்தியர்

Chithra / Jul 7th 2024, 10:27 am
image

Advertisement

 

எதிர்காலத்தில் சுகாதாரத்துறையை சீர்குலைக்கும் அரசியல் சதித்திட்டம் இடம்பெறக்கூடும் என வைத்தியர் ருக்ஷான் பெல்லன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதற்காக பொருளாதார சிரமங்களுடனான ஊழியர்களை நியமிக்க அந்த குழுக்கள் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய சுகாதார தொழிற்சங்க சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட போதே வைத்தியர் ருக்ஷான் பெல்லன இதனை தெரிவித்தார்.

இதேவேளை, பல கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறையை சீர்குலைக்கும் அரசியல் சதித் திட்டம். எச்சரித்த வைத்தியர்  எதிர்காலத்தில் சுகாதாரத்துறையை சீர்குலைக்கும் அரசியல் சதித்திட்டம் இடம்பெறக்கூடும் என வைத்தியர் ருக்ஷான் பெல்லன எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதற்காக பொருளாதார சிரமங்களுடனான ஊழியர்களை நியமிக்க அந்த குழுக்கள் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய சுகாதார தொழிற்சங்க சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட போதே வைத்தியர் ருக்ஷான் பெல்லன இதனை தெரிவித்தார்.இதேவேளை, பல கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement