ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கடற்கரைக்கு அருகில் இன்று (20) காலை மூன்று முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவற்றில், இரண்டு நிலநடுக்கங்கள் 6.7 மெக்னிடியூட் அளவுடையதாகவும்,
மற்றையது 7.4 மெக்னிடியூட் அளவுடையதாக பதிவாகியுள்ளதாக யூரோ மத்திய தரைக்கடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ஆரம்பத்தில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கம்சாட்ஸ்கி நகரை அண்மித்த கடற்பகுதியில் 32 நிமிடங்களுக்குள் குறித்த மூன்று நிலஅதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அதனை அண்டிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவை மூன்று முறை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கடற்கரைக்கு அருகில் இன்று (20) காலை மூன்று முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவற்றில், இரண்டு நிலநடுக்கங்கள் 6.7 மெக்னிடியூட் அளவுடையதாகவும், மற்றையது 7.4 மெக்னிடியூட் அளவுடையதாக பதிவாகியுள்ளதாக யூரோ மத்திய தரைக்கடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ஆரம்பத்தில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்சாட்ஸ்கி நகரை அண்மித்த கடற்பகுதியில் 32 நிமிடங்களுக்குள் குறித்த மூன்று நிலஅதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அதனை அண்டிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.