• Jul 05 2024

இரா.சம்பந்தனின் இறுதி நிகழ்வுகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு...!

Sharmi / Jul 3rd 2024, 12:40 pm
image

Advertisement

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை இந்து மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தனின் பூதவுடல் நாளையதினம்(04) மாலை திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 07 ஆம் ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 4.00 மணியளவில் அன்னாரது பூதவுடல் தகனக்கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தனின் இறுதி நிகழ்வுகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை இந்து மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சம்பந்தனின் பூதவுடல் நாளையதினம்(04) மாலை திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.அதனைத் தொடர்ந்து 07 ஆம் ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 4.00 மணியளவில் அன்னாரது பூதவுடல் தகனக்கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement