• Sep 09 2025

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு சென்றவர் மீது துப்பாக்கிச் சூடு; தென்னிலங்கையில் பரபரப்பு

Chithra / Sep 9th 2025, 3:19 pm
image

 

காலி, பலப்பிட்டிய, பெட்டிவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க நிரோஷன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார். 

இவர் வழக்கு விசாரணைக்காக முச்சக்கரவண்டியில் நீதிமன்றத்துக்கு சென்றுக்கொண்டிருக்கும் போது இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு சென்றவர் மீது துப்பாக்கிச் சூடு; தென்னிலங்கையில் பரபரப்பு  காலி, பலப்பிட்டிய, பெட்டிவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க நிரோஷன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார். இவர் வழக்கு விசாரணைக்காக முச்சக்கரவண்டியில் நீதிமன்றத்துக்கு சென்றுக்கொண்டிருக்கும் போது இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement