நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரைவிளக்கம் அருகே இலங்கை நாட்டை சேர்ந்த புதிய பைபர் படகு இயந்திரத்துடன் கரை ஒதுங்கி உள்ளது.
கோடியக்கரை கடற்கரையில் ஆள் இல்லாமல் சந்தேகத்துக்கு இடமாக ஒரு படகு கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் உடனடியாக விரைந்து சென்று அந்தப் படகை ஆய்வு செய்தனர். அந்தப் படகு இலங்கை நாட்டைச் சேர்ந்த படகு என்பது படகு பதிவு எண்னை வைத்து உறுதிப் படுத்தினர்.
அந்தப் படகில் மீன்பிடி வலை, வெளியிணைப்பு இயந்திரம் உள்ளிட்டவை உள்ளது.
இலங்கையிலிருந்து படகில் மர்ம நபர்கள் யாராவது தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ளார்களா? கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகா? என கியூ பிரிவு போலீசார், கடலோர காவல் குழும போலீசார் படகை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
படகு கரை ஒதுங்கியுள்ள பகுதி காட்டுப்பகுதி என்பதால் யாராவது காட்டில் மறைந்திருக்கிறார்களா என போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கரைஒதுங்கிய இலங்கை பைபர் படகு; பொலிஸார் தீவிர விசாரணை நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரைவிளக்கம் அருகே இலங்கை நாட்டை சேர்ந்த புதிய பைபர் படகு இயந்திரத்துடன் கரை ஒதுங்கி உள்ளது.கோடியக்கரை கடற்கரையில் ஆள் இல்லாமல் சந்தேகத்துக்கு இடமாக ஒரு படகு கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் உடனடியாக விரைந்து சென்று அந்தப் படகை ஆய்வு செய்தனர். அந்தப் படகு இலங்கை நாட்டைச் சேர்ந்த படகு என்பது படகு பதிவு எண்னை வைத்து உறுதிப் படுத்தினர். அந்தப் படகில் மீன்பிடி வலை, வெளியிணைப்பு இயந்திரம் உள்ளிட்டவை உள்ளது. இலங்கையிலிருந்து படகில் மர்ம நபர்கள் யாராவது தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ளார்களா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகா என கியூ பிரிவு போலீசார், கடலோர காவல் குழும போலீசார் படகை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.படகு கரை ஒதுங்கியுள்ள பகுதி காட்டுப்பகுதி என்பதால் யாராவது காட்டில் மறைந்திருக்கிறார்களா என போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.