• Oct 18 2025

யாழில் ரயிலில் இருந்து கீழே இறங்க முற்பட்ட பெண் பலி

Chithra / Oct 16th 2025, 7:36 pm
image


யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து கீழே இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து உயிரிழந்த துயரச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி கோவிற்குடியிருப்பைச் சேர்ந்த 53 வயதான சு.சுபாசினி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த ரயில் சாவகச்சேரி - சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.

இருப்பினும் அவர் இருந்த பெட்டியின் வாயில் ஊடாக இறங்குவதற்கு இறங்கு தளம் இல்லாத காரணத்தால் வேறு பெட்டி ஊடாக சென்று இறங்க முற்பட்ட வேளையில் ரயில் நகர்ந்ததால் பெண் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். 

படுகாயமடைந்த பெண்ணை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கும் மகனிடம் சென்று மீண்டும் வீடு திரும்பிய போதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் ரயிலில் இருந்து கீழே இறங்க முற்பட்ட பெண் பலி யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து கீழே இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து உயிரிழந்த துயரச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.சாவகச்சேரி கோவிற்குடியிருப்பைச் சேர்ந்த 53 வயதான சு.சுபாசினி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த ரயில் சாவகச்சேரி - சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.இருப்பினும் அவர் இருந்த பெட்டியின் வாயில் ஊடாக இறங்குவதற்கு இறங்கு தளம் இல்லாத காரணத்தால் வேறு பெட்டி ஊடாக சென்று இறங்க முற்பட்ட வேளையில் ரயில் நகர்ந்ததால் பெண் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த பெண்ணை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கும் மகனிடம் சென்று மீண்டும் வீடு திரும்பிய போதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement