போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணியொருவர் திருகோணமலை ஆனந்த பிரகதீஸ்வரா கலாலயாவில் பரதக்கலையின் சில படிநிலைகளை ஆர்வத்துடன் பயின்றுள்ளார்.
போலந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த தோமஸ் ஜொயன்னா தம்பதியினர் நேற்றுமுன்தினம் நடன ஆசிரியர் திருமதி மேனகா பாக்கியராஜாவின் வழிநடத்தலில் அவருடைய மாணவிகளுடன் இணைந்து நடனக்கலையை பயின்றனர்.
தமிழர்களின் கலை, கலாச்சார பண்பாடுகளில் தாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தங்களைப் போன்று பலரும் பரதக்கலையை பயில மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறித்த வெளிநாட்டு தம்பதியினர் தெரிவித்திருந்தனர்.
இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இலங்கை மக்களுடைய குறிப்பாக தமிழர்களுடைய வாழ்வியலில் ஆர்வம் காட்டி வருவதாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இதுபோன்ற கலைகளை சுற்றுலாத்துறையுடன் இணைப்பதன் மூலம் சுற்றுலாத்துறையில் அதிக வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் ஆர்வத்துடன் பரதம் பயின்ற போலந்து நாட்டு பெண்மணி போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணியொருவர் திருகோணமலை ஆனந்த பிரகதீஸ்வரா கலாலயாவில் பரதக்கலையின் சில படிநிலைகளை ஆர்வத்துடன் பயின்றுள்ளார். போலந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த தோமஸ் ஜொயன்னா தம்பதியினர் நேற்றுமுன்தினம் நடன ஆசிரியர் திருமதி மேனகா பாக்கியராஜாவின் வழிநடத்தலில் அவருடைய மாணவிகளுடன் இணைந்து நடனக்கலையை பயின்றனர்.தமிழர்களின் கலை, கலாச்சார பண்பாடுகளில் தாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தங்களைப் போன்று பலரும் பரதக்கலையை பயில மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறித்த வெளிநாட்டு தம்பதியினர் தெரிவித்திருந்தனர்.இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இலங்கை மக்களுடைய குறிப்பாக தமிழர்களுடைய வாழ்வியலில் ஆர்வம் காட்டி வருவதாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.அத்துடன் இதுபோன்ற கலைகளை சுற்றுலாத்துறையுடன் இணைப்பதன் மூலம் சுற்றுலாத்துறையில் அதிக வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.