• Dec 12 2025

வெள்ள அனர்த்தத்தின்போது பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி திடீரென உயிரிழப்பு!

Chithra / Dec 12th 2025, 2:54 pm
image

வெள்ள அனர்த்தத்தின்போது பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி ஒருவர் திடீரென உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


களனி கங்கையின் ராணியாக முடிசூட்டப்பட்ட சேதவத்தை, கோட்விலாவைச் சேர்ந்த யுவதியான ஓஷாதி வியாமா என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.


கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் படித்து வந்த அவர் 20 வயதில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.


அவர் நோயால் அண்மைக்காலமாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


சமீபத்திய வெள்ளத்தின் போது இடம்பெயர்ந்த தனது அண்டை வீட்டு மக்களை காப்பாற்றவும், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்ல, இரவுபகலாக படகில் பணியாற்றி, பெரிய தியாகத்தை செய்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளார்.


ஓஷாதி தனது 3 வயதிலிருந்தே நீச்சல் கற்றுக்கொண்டார். குறித்த யுவதி தனது 7 வயதில் 14 நிமிடங்கள் 41 வினாடிகளில் களனி ஆற்றின் குறுக்கே 1000 மீட்டர் நீந்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.


ஓஷாதியின் சாதனையை காண கிராமவாசிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் அன்றையதினம் களனி ஆற்றின் இருபுறமும் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் குறித்த இளம் யுவதி திடீரென உயிரை மாய்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வெள்ள அனர்த்தத்தின்போது பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி திடீரென உயிரிழப்பு வெள்ள அனர்த்தத்தின்போது பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி ஒருவர் திடீரென உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.களனி கங்கையின் ராணியாக முடிசூட்டப்பட்ட சேதவத்தை, கோட்விலாவைச் சேர்ந்த யுவதியான ஓஷாதி வியாமா என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் படித்து வந்த அவர் 20 வயதில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.அவர் நோயால் அண்மைக்காலமாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய வெள்ளத்தின் போது இடம்பெயர்ந்த தனது அண்டை வீட்டு மக்களை காப்பாற்றவும், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்ல, இரவுபகலாக படகில் பணியாற்றி, பெரிய தியாகத்தை செய்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளார்.ஓஷாதி தனது 3 வயதிலிருந்தே நீச்சல் கற்றுக்கொண்டார். குறித்த யுவதி தனது 7 வயதில் 14 நிமிடங்கள் 41 வினாடிகளில் களனி ஆற்றின் குறுக்கே 1000 மீட்டர் நீந்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.ஓஷாதியின் சாதனையை காண கிராமவாசிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் அன்றையதினம் களனி ஆற்றின் இருபுறமும் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் குறித்த இளம் யுவதி திடீரென உயிரை மாய்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement