• Oct 13 2024

புத்தளத்தில் விபத்து- இராணுவ சிப்பாய் உயிரிழப்பு..!

Sharmi / Oct 12th 2024, 4:54 pm
image

Advertisement

புத்தளம் கற்பிட்டி பகுதியில் இருந்து பாலாவி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து நேற்று(11) இரவு கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் கரம்பை பாலத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஆனமடுவ தோனிகலைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இராணுவ சிப்பாய் எனவும், புத்தளம் புணர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.



புத்தளத்தில் விபத்து- இராணுவ சிப்பாய் உயிரிழப்பு. புத்தளம் கற்பிட்டி பகுதியில் இருந்து பாலாவி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்து நேற்று(11) இரவு கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் கரம்பை பாலத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்தவர் ஆனமடுவ தோனிகலைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இராணுவ சிப்பாய் எனவும், புத்தளம் புணர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement