வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி பகுதியில் ஒருநாள் சேவையாக வாகன புகைப் பரிசோதனை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா - வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி பகுதியில் வாகனப் புகைப் பரிசோதனை நிலையமொன்று இல்லாத நிலையில் அப்பகுதி மக்கள் பெரும் இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் 2025ஆம் ஆண்டிற்கான முதலாவது வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நெடுங்கேணியில் வாகனப் புகைப் பரிசோதனை நிலையம் ஒன்றினை அமைக்கவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், நெடுங்கேணியில் வாரத்தில் ஒருநாள் சேவையாக வாகனப் புகைப் பரிசோதனை நிலையம் இயங்கிவருவதாக, இன்று (11) நடைபெற்ற இந்த ஆண்டுக்கான இரண்டாவது வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய ரவிகரன், தமது கோரிக்கையை ஏற்று, நெடுங்கேணிப் பகுதி மக்கள் வாகனப் புகைப் பரிசோதனை மேற்கொள்வதில் தொடர்ச்சியாக எதிர்நோக்கிய இடர்ப்பாட்டைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
நெடுங்கேணியில் வாகனப் புகைப் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி பகுதியில் ஒருநாள் சேவையாக வாகன புகைப் பரிசோதனை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,வவுனியா - வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி பகுதியில் வாகனப் புகைப் பரிசோதனை நிலையமொன்று இல்லாத நிலையில் அப்பகுதி மக்கள் பெரும் இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.இந்நிலையில் 2025ஆம் ஆண்டிற்கான முதலாவது வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நெடுங்கேணியில் வாகனப் புகைப் பரிசோதனை நிலையம் ஒன்றினை அமைக்கவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.இந்நிலையில், நெடுங்கேணியில் வாரத்தில் ஒருநாள் சேவையாக வாகனப் புகைப் பரிசோதனை நிலையம் இயங்கிவருவதாக, இன்று (11) நடைபெற்ற இந்த ஆண்டுக்கான இரண்டாவது வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் பேசிய ரவிகரன், தமது கோரிக்கையை ஏற்று, நெடுங்கேணிப் பகுதி மக்கள் வாகனப் புகைப் பரிசோதனை மேற்கொள்வதில் தொடர்ச்சியாக எதிர்நோக்கிய இடர்ப்பாட்டைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்தார்.