அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட AI59 ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியது.
விமானத்தில் 242 பயணிகள் பயணித்த நிலையில் ஒருவரைத் தவிர மிகுதி 241 பயணிகளும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அத்துடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களில் 5 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்திற்குப் பின்னர் இன்று அதேபாதையில் AI59 ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் ஒன்று லண்டனுக்குப் புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விமானம் ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து சரியான காரணம் வெளியிடப்படவில்லை. எனினும் AI59 ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட AI 159 விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்து எந்த தகவலும் தங்களுக்கு வழங்கப்படவில்லை . அடுத்து என்ன நடக்கிறது என்றும் உறுதியாகத் தெரியவில்லை . ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குறித்த விமானத்தில் பயணிக்கவிருந்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.
உலகத்தையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்திற்குப் பிறகு முதலாவதாக இன்று AI59 ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் புறப்படவிருந்தது. அகமதாபாத் விமான விபத்தின் தாக்கம் தற்போது வரை உள்ளதால் திடீரென AI 159 விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஏர் இந்தியா நிறுவனத்திலுள்ள அனைத்து விமானங்களிலும் தொழில்நுட்ப சோதனைகள் இடம்பெற்று வருவதோடு ஏர் இந்தியா விமான அதிகாரிகளிடையே முக்கிய கலந்துரையாடலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத்திலிருந்து மீண்டும் லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென ரத்து. - அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட AI59 ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியது. விமானத்தில் 242 பயணிகள் பயணித்த நிலையில் ஒருவரைத் தவிர மிகுதி 241 பயணிகளும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அத்துடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களில் 5 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்திற்குப் பின்னர் இன்று அதேபாதையில் AI59 ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் ஒன்று லண்டனுக்குப் புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து சரியான காரணம் வெளியிடப்படவில்லை. எனினும் AI59 ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட AI 159 விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்து எந்த தகவலும் தங்களுக்கு வழங்கப்படவில்லை . அடுத்து என்ன நடக்கிறது என்றும் உறுதியாகத் தெரியவில்லை . ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குறித்த விமானத்தில் பயணிக்கவிருந்த பயணிகள் தெரிவித்துள்ளனர். உலகத்தையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்திற்குப் பிறகு முதலாவதாக இன்று AI59 ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் புறப்படவிருந்தது. அகமதாபாத் விமான விபத்தின் தாக்கம் தற்போது வரை உள்ளதால் திடீரென AI 159 விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏர் இந்தியா நிறுவனத்திலுள்ள அனைத்து விமானங்களிலும் தொழில்நுட்ப சோதனைகள் இடம்பெற்று வருவதோடு ஏர் இந்தியா விமான அதிகாரிகளிடையே முக்கிய கலந்துரையாடலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.