இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபயகுணசேகர 2019 இல் தான் இடமாற்றப்பட்டமை குறித்தும் உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்த தனது ஆராய்ச்சிகள் தடுக்கப்பட்டது குறித்தும் சுட்டிக்காட்டி ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்
2019 இல் விவரிக்கப்படாத இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனது இடமாற்றம் திட்டமிடப்பட்ட ஆனால் முன்னெடுக்கப்படாத விதம் அரசியல் தலையீடுகள் குறித்தும் நிறுவன சமரசம் குறித்தும் தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றது என தெரிவித்துள்ள அவர் என்னை ஜேர்மனியின் பேர்ளினின் துணை தூதரகத்திற்கு நியமிப்பதாக தெரிவித்திருந்தார்கள் அதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் உள்ள உண்மைகள் அதிகாரத்துவ குழப்பம் மற்றும் அரசியல் நோக்கம் காரணமாக புதைந்துபோகக்கூடாது.
எனது திடீர் இடமாற்றம் குறித்து நீதி நிலைநாட்டப்ட்டால் நான் எனது நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் நேர்மையுடன் பணியாற்ற தயாராகயுள்ளேன்.
உத்தியோகபூர்வ வேண்டுகோள் விடுக்கப்பட்டால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த ஆய்வுகள்: கோட்டாபய ஆட்சியில் நடந்த அநீதி ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபயகுணசேகர 2019 இல் தான் இடமாற்றப்பட்டமை குறித்தும் உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்த தனது ஆராய்ச்சிகள் தடுக்கப்பட்டது குறித்தும் சுட்டிக்காட்டி ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்2019 இல் விவரிக்கப்படாத இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.எனது இடமாற்றம் திட்டமிடப்பட்ட ஆனால் முன்னெடுக்கப்படாத விதம் அரசியல் தலையீடுகள் குறித்தும் நிறுவன சமரசம் குறித்தும் தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றது என தெரிவித்துள்ள அவர் என்னை ஜேர்மனியின் பேர்ளினின் துணை தூதரகத்திற்கு நியமிப்பதாக தெரிவித்திருந்தார்கள் அதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் உள்ள உண்மைகள் அதிகாரத்துவ குழப்பம் மற்றும் அரசியல் நோக்கம் காரணமாக புதைந்துபோகக்கூடாது.எனது திடீர் இடமாற்றம் குறித்து நீதி நிலைநாட்டப்ட்டால் நான் எனது நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் நேர்மையுடன் பணியாற்ற தயாராகயுள்ளேன்.உத்தியோகபூர்வ வேண்டுகோள் விடுக்கப்பட்டால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என அவர் தெரிவித்துள்ளார்.