• Feb 17 2026

பதுளையில் இன்று அதிகாலை மீண்டும் மண்சரிவு; தப்பியோடிய மக்கள்!

Chithra / Dec 10th 2025, 9:28 am
image


பதுளையில் இன்று அதிகாலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டமையினால் அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு தேடி தப்பிச் சென்றுள்ளனர்.


எகரிய, மீகொல்ல, மேல் பகுதியிலேயே இன்று அதிகாலை 4 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.


இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள், விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.


மக்களை வெளியேற்றும் முயற்சிகள் இருந்தபோதிலும், பல குடும்பங்கள் அப்பகுதியில் தங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு மையங்களை அடைய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மண்சரிவு ஏற்பட்ட போதிலும், அப்பகுதியில் இருந்து எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் ஏற்பட்ட டித்வா சூறாவளி காரணமாக மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மலையத்தில் அதிகளவான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய மண்சரிவு காரணமாக மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்ற நிலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டமையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 


பதுளையில் இன்று அதிகாலை மீண்டும் மண்சரிவு; தப்பியோடிய மக்கள் பதுளையில் இன்று அதிகாலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டமையினால் அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு தேடி தப்பிச் சென்றுள்ளனர்.எகரிய, மீகொல்ல, மேல் பகுதியிலேயே இன்று அதிகாலை 4 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள், விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.மக்களை வெளியேற்றும் முயற்சிகள் இருந்தபோதிலும், பல குடும்பங்கள் அப்பகுதியில் தங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு மையங்களை அடைய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மண்சரிவு ஏற்பட்ட போதிலும், அப்பகுதியில் இருந்து எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் ஏற்பட்ட டித்வா சூறாவளி காரணமாக மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மலையத்தில் அதிகளவான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய மண்சரிவு காரணமாக மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்ற நிலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டமையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement