• May 11 2024

இராணுவம் கைது செய்த மகனைத் தேடி போராடிய மற்றுமொரு தாய் உயிரிழப்பு!

Chithra / Dec 18th 2022, 1:30 pm
image

Advertisement

கடந்த 1996ஆம் ஆண்டு புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மகனைத்தேடி போராட்டம் செய்த தாயார் ஒருவர் நேற்றுமுன்தினம் (17) உயிரிழந்துள்ளார்.

புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியைச் சேர்ந்த செல்வன் சோதி என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அன்னார் தனது மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர், தனது மகனை மீண்டும் தன்னிடம் மீட்டுத் தருமாறு கோரி பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.  இருப்பினும் அவருக்கு இறுதிவரை அவரது மகனை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

தமது பிள்ளைகளை தேடி போராட்டங்களில் ஈடுபட்ட பல பெற்றோர்கள் மற்றுங உறவினர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களது பிள்ளைகளை காண்பது என்பது அவர்களுக்கு கடைசிவரை கனவாகவே அமைந்துள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவம் கைது செய்த மகனைத் தேடி போராடிய மற்றுமொரு தாய் உயிரிழப்பு கடந்த 1996ஆம் ஆண்டு புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மகனைத்தேடி போராட்டம் செய்த தாயார் ஒருவர் நேற்றுமுன்தினம் (17) உயிரிழந்துள்ளார்.புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியைச் சேர்ந்த செல்வன் சோதி என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அன்னார் தனது மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர், தனது மகனை மீண்டும் தன்னிடம் மீட்டுத் தருமாறு கோரி பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.  இருப்பினும் அவருக்கு இறுதிவரை அவரது மகனை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.தமது பிள்ளைகளை தேடி போராட்டங்களில் ஈடுபட்ட பல பெற்றோர்கள் மற்றுங உறவினர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களது பிள்ளைகளை காண்பது என்பது அவர்களுக்கு கடைசிவரை கனவாகவே அமைந்துள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement