• May 10 2024

இலங்கையில் அறிமுகமாகவுள்ள மற்றுமொரு புதிய வரி! நிதி இராஜாங்க அமைச்சரின் அதிர்ச்சி அறிவிப்பு

Chithra / Jan 29th 2024, 2:08 pm
image

Advertisement

2025 ஆம் ஆண்டு புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

கேகாலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிக்கவோ எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என்றும் அரச வருமானத்தை அதிகரிக்கவே எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் மறைமுக வரி விதிப்பால் பொருட்களின் விலை உயராது .

பொருட்களின் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படும்.

025 ஆம் ஆண்டு புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும்.

சொத்து வரி என்பது நேரடி வரி என்றும் அதிக சொத்து வைத்திருப்பவர்களிடம் வசூலிக்கப்படும் குறிப்பிட்ட தொகை தான் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அறிமுகமாகவுள்ள மற்றுமொரு புதிய வரி நிதி இராஜாங்க அமைச்சரின் அதிர்ச்சி அறிவிப்பு 2025 ஆம் ஆண்டு புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.எதிர்காலத்தில் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிக்கவோ எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என்றும் அரச வருமானத்தை அதிகரிக்கவே எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அத்துடன் மறைமுக வரி விதிப்பால் பொருட்களின் விலை உயராது .பொருட்களின் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படும்.025 ஆம் ஆண்டு புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும்.சொத்து வரி என்பது நேரடி வரி என்றும் அதிக சொத்து வைத்திருப்பவர்களிடம் வசூலிக்கப்படும் குறிப்பிட்ட தொகை தான் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement