2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஜனாதிபதியின் செலவிற்காக வரவு செலவுத் திட்டத்தில் ரணில் ஒதுக்கிய அதே தொகையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒதுக்கியுள்ளதாக கேகாலை மாவட்ட சபை உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன் போது அவர் கூறியதாவது,
ரணிலுக்கு அதிகப்படியான சலுகைகள் இருப்பதாக அவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர், ஆனால் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 1.4 ட்ரில்லியன் ரூபா வரவு செலவு திட்டத்திலிருந்து செலவிட்டுள்ளார்.
தற்போது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு 1.4 ட்ரில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையில் எந்த மாற்றமும் இல்லை, அப்படியென்றால் அதில் என்ன மாற்றம் இருக்கிறது? என்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தடையின்றி நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார். அது நல்லது.
IMF ஒப்பந்தத்தின் கட்டமைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், அதன் உள்ளடக்கங்களில் சிலவற்றை மாற்றுவோம் என்று கூறியிருந்தோம் என்றார்
ரணிலின் வழியில் அநுர; நான்கே மாதங்களுக்கு 1.4 ட்ரில்லியன் கேள்வியெழுப்பிய கபீர் ஹாசிம் 2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஜனாதிபதியின் செலவிற்காக வரவு செலவுத் திட்டத்தில் ரணில் ஒதுக்கிய அதே தொகையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒதுக்கியுள்ளதாக கேகாலை மாவட்ட சபை உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அதன் போது அவர் கூறியதாவது,ரணிலுக்கு அதிகப்படியான சலுகைகள் இருப்பதாக அவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர், ஆனால் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 1.4 ட்ரில்லியன் ரூபா வரவு செலவு திட்டத்திலிருந்து செலவிட்டுள்ளார்.தற்போது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு 1.4 ட்ரில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த தொகையில் எந்த மாற்றமும் இல்லை, அப்படியென்றால் அதில் என்ன மாற்றம் இருக்கிறது என்றார்.சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தடையின்றி நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார். அது நல்லது.IMF ஒப்பந்தத்தின் கட்டமைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், அதன் உள்ளடக்கங்களில் சிலவற்றை மாற்றுவோம் என்று கூறியிருந்தோம் என்றார்