நிதி மோசடி தொடர்பில் குற்றவாளியாக்கப்பட்ட ஒருவரை நாட்டின் பிரதான அமைச்சரவை அமைச்சராக நியமித்திருப்பது பாரிய பிரச்சினையாகும் என முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
காெழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கேள்விக்கோரல் செயற்பாட்டில் நிதி மோசடி மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் மின்சக்தி வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுவருகின்றன.
அமைச்சர் குமார ஜயகொடி உர கூட்டுத்தாபனத்தில் பணிபுரிகின்ற காலத்தில் அவருக்கு எதிராக 80 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
அந்த விசாரணையில் அவரை குற்றவாளியாக்கியதுடன் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கும் அப்போதைய பணிப்பாளர் சபையினால் தீர்மானிக்கப்பட்டது.
தற்போது இதுதொடர்பில் நாட்டுக்கள் பாரியளவில் பேசப்படுகின்ற நிலையில், அமைச்சர் குமார ஜயகொடி தொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் நாங்கள் அவதானித்து வருகிறோம்.
ஊழல் மோசடி தொடர்பில் குற்றவாளிக்கப்பட்ட அல்லது அவ்வாறான விடயத்துக்கு குற்றச்சாட்டுள்ள யாருக்கும் ஆட்சியில் பதவி வழங்கப்படமாட்டாது என்றே தேர்தலுக்கு முன்னர் இவர்கள் தெரிவித்தார்கள்.
அவ்வாறு தெரிவித்த அரசாங்கம் ஒன்று, நிதி மோசடி தொடர்பில் குற்றவாளியாக்கப்பட்ட ஒருவரை நாட்டின் பிரதான அமைச்சரவை அமைச்சராக நியமித்திருப்பது தொடர்பில் எங்களுக்கு பாரிய பிரச்சினை இருக்கிறது என்றார்.
நிதி மோசடியில் குற்றவாளி ஒருவரை அமைச்சராக நியமித்தது பாரிய பிரச்சினை – வெடித்த சர்ச்சை நிதி மோசடி தொடர்பில் குற்றவாளியாக்கப்பட்ட ஒருவரை நாட்டின் பிரதான அமைச்சரவை அமைச்சராக நியமித்திருப்பது பாரிய பிரச்சினையாகும் என முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.காெழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.கேள்விக்கோரல் செயற்பாட்டில் நிதி மோசடி மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் மின்சக்தி வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுவருகின்றன. அமைச்சர் குமார ஜயகொடி உர கூட்டுத்தாபனத்தில் பணிபுரிகின்ற காலத்தில் அவருக்கு எதிராக 80 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. அந்த விசாரணையில் அவரை குற்றவாளியாக்கியதுடன் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கும் அப்போதைய பணிப்பாளர் சபையினால் தீர்மானிக்கப்பட்டது.தற்போது இதுதொடர்பில் நாட்டுக்கள் பாரியளவில் பேசப்படுகின்ற நிலையில், அமைச்சர் குமார ஜயகொடி தொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் நாங்கள் அவதானித்து வருகிறோம். ஊழல் மோசடி தொடர்பில் குற்றவாளிக்கப்பட்ட அல்லது அவ்வாறான விடயத்துக்கு குற்றச்சாட்டுள்ள யாருக்கும் ஆட்சியில் பதவி வழங்கப்படமாட்டாது என்றே தேர்தலுக்கு முன்னர் இவர்கள் தெரிவித்தார்கள். அவ்வாறு தெரிவித்த அரசாங்கம் ஒன்று, நிதி மோசடி தொடர்பில் குற்றவாளியாக்கப்பட்ட ஒருவரை நாட்டின் பிரதான அமைச்சரவை அமைச்சராக நியமித்திருப்பது தொடர்பில் எங்களுக்கு பாரிய பிரச்சினை இருக்கிறது என்றார்.