பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய “நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி – அடுத்த இராணுவத் தளபதிக்கு இந்தப் போரை நான் விட்டுச் செல்ல மாட்டேன்” என்ற புத்தகம் வெளியிடும் நிகழ்வு நேற்று கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கையின் நவீன வரலாற்றில் ஒரு தீர்க்கமான காலகட்டத்தில் தனது அனுபவங்களையும் தான் அனுபவித்த தலைமைத்துவ சவால்கள் தொடர்பில் பீல்ட் மார்ஷல் பொன்சேகா உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், அனோமா பொன்சேகா மற்றும் குடும்ப உறுப்பினர்கள், முப்படைகளின் தளபதிகள், முன்னாள் இராணுவத் தளபதிகள், பீல்ட் மார்ஷலின் இராணுவ சகாக்கள், இராஜதந்திரிகள் முப்படைகளின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி - பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் புத்தகம் வெளியீடு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய “நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி – அடுத்த இராணுவத் தளபதிக்கு இந்தப் போரை நான் விட்டுச் செல்ல மாட்டேன்” என்ற புத்தகம் வெளியிடும் நிகழ்வு நேற்று கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.இலங்கையின் நவீன வரலாற்றில் ஒரு தீர்க்கமான காலகட்டத்தில் தனது அனுபவங்களையும் தான் அனுபவித்த தலைமைத்துவ சவால்கள் தொடர்பில் பீல்ட் மார்ஷல் பொன்சேகா உரையாற்றினார். இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், அனோமா பொன்சேகா மற்றும் குடும்ப உறுப்பினர்கள், முப்படைகளின் தளபதிகள், முன்னாள் இராணுவத் தளபதிகள், பீல்ட் மார்ஷலின் இராணுவ சகாக்கள், இராஜதந்திரிகள் முப்படைகளின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.