• Jun 18 2025

ஐ.தே.க பெண் உறுப்பினர் மீதான தாக்குதல் - பஃப்ரல் அமைப்பு கண்டனம்!

shanuja / Jun 18th 2025, 1:48 pm
image

கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி  உறுப்பினர் உடுவடுகே சந்தமாலி மீது அடையாளம் தெரியாத குழுவால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலுக்கு  பஃப்ரல் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. 


கொழும்பு  கிராண்ட்பாஸ் பகுதியில் கொழும்பு மாநகர சபையின் புதிய தவிசாளர் தெரிவையடுத்து கொண்டாட்ட  நிகழ்வு நேற்று முன்தினம் (16) இரவு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்போது  அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.


தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் உடுவடுகே சந்தமாலி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த நிலையிலேயே உறுப்பினர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பஃப்ரல் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது, இந்த சம்பவம் திங்கட்கிழமை , உறுப்பினர்  தனது அலுவலகம் அருகே காத்திருந்தபோது நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எந்தவொரு பகுதியிலும் தங்கள் அரசியல் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்காக எந்தவொரு நபருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. இது இலங்கை அரசியலமைப்பின் கீழ் உள்ள உரிமை என்றும் பஃப்ரல் சுட்டிக்காட்டுகிறது.  


இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் . இது ஆட்சியில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் முயற்சிகளை எதிர்க்கும் என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டது. 


எனவே, சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் உடனடியாகக் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பஃப்ரல் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தது.- என்றுள்ளது.

ஐ.தே.க பெண் உறுப்பினர் மீதான தாக்குதல் - பஃப்ரல் அமைப்பு கண்டனம் கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி  உறுப்பினர் உடுவடுகே சந்தமாலி மீது அடையாளம் தெரியாத குழுவால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலுக்கு  பஃப்ரல் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. கொழும்பு  கிராண்ட்பாஸ் பகுதியில் கொழும்பு மாநகர சபையின் புதிய தவிசாளர் தெரிவையடுத்து கொண்டாட்ட  நிகழ்வு நேற்று முன்தினம் (16) இரவு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்போது  அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் உடுவடுகே சந்தமாலி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையிலேயே உறுப்பினர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பஃப்ரல் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது, இந்த சம்பவம் திங்கட்கிழமை , உறுப்பினர்  தனது அலுவலகம் அருகே காத்திருந்தபோது நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பகுதியிலும் தங்கள் அரசியல் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்காக எந்தவொரு நபருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. இது இலங்கை அரசியலமைப்பின் கீழ் உள்ள உரிமை என்றும் பஃப்ரல் சுட்டிக்காட்டுகிறது.  இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் . இது ஆட்சியில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் முயற்சிகளை எதிர்க்கும் என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டது. எனவே, சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் உடனடியாகக் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பஃப்ரல் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தது.- என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement