• Sep 20 2024

தாளையடி கிராமத்தை தனியான கிராமசேவகர் பிரிவாக மாற்ற முயற்சி- பிரதேச செயலாளரின் செயற்பாட்டிற்கு மக்கள் எதிர்ப்பு..!

Sharmi / Aug 5th 2024, 3:21 pm
image

Advertisement

தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக மருதங்கேணி கிராம மக்கள் இன்று காலை 9:30 மணிமுதல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.  

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள மருதங்கேணி கிராம சேவகர் பிரிவு  காணப்படுகின்றது.

இக் கிராம சேவகர் பிரிவில் மருதங்கேணி வடக்கு, மருதங்கேணி தெற்கு, தாளையடி என்கின்ற மூன்று கிராமங்கள் அடங்குகின்றன.

இந்நிலையில், தாளையடி என்கின்ற சுமார் 140 குடும்பங்களைக் கொண்ட கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் இரகசியமாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்து,  மருதங்கேணி வடக்கு, மருதங்கேணி தெற்கு கிராம மக்கள், தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதை உடனடியாக கைவிடுமாறும் கோரியே குறித்த போராட்டம் நடாத்தப்பட்டது. 

இதில் மருதங்கேணி எங்கள் சொத்து இதனை ஒருநாளும் பிரிக்க இடமளிக்க மாட்டோம், தாளையடியில் கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டத்திற்காக எமது பாரம்பரிய நிலங்களை அபகரிக்காதே,  உங்கள் டீலுக்காக தாளையடி கிராமத்தை பிரிக்காதே, மருதங்கேணி எங்கள் பூர்வீக சொத்து, உங்கள் நலனுக்கு எங்கள் பிரதேசம் லஞ்சமா, எல்லை நிர்ணயம் செய்தபோது அயல் கிராமங்களை அழைக்காதது ஏன்? என்றவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.

அங்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலர்,

தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக ஆக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

அவ்வாறு தாளையடி கிராமம் தனியான கிராம சேவகர் பிரிவாக ஆக்கப்படும்போது எல்லைகள் நிர்ணயம் செய்யும் போது தங்களையும் அழைத்துத்தான் எல்லை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.  

இதன்போது குறுக்கிட்ட போராட்டகாரர்கள் பிரதேச செயலரினால் யாழ் மாவட்ட செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் பிரதேச செயலர் பதில் எதுவும் கூற முடியாது அங்கிருந்து விலகிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


தாளையடி கிராமத்தை தனியான கிராமசேவகர் பிரிவாக மாற்ற முயற்சி- பிரதேச செயலாளரின் செயற்பாட்டிற்கு மக்கள் எதிர்ப்பு. தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக மருதங்கேணி கிராம மக்கள் இன்று காலை 9:30 மணிமுதல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.  இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள மருதங்கேணி கிராம சேவகர் பிரிவு  காணப்படுகின்றது.இக் கிராம சேவகர் பிரிவில் மருதங்கேணி வடக்கு, மருதங்கேணி தெற்கு, தாளையடி என்கின்ற மூன்று கிராமங்கள் அடங்குகின்றன.இந்நிலையில், தாளையடி என்கின்ற சுமார் 140 குடும்பங்களைக் கொண்ட கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் இரகசியமாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்து,  மருதங்கேணி வடக்கு, மருதங்கேணி தெற்கு கிராம மக்கள், தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதை உடனடியாக கைவிடுமாறும் கோரியே குறித்த போராட்டம் நடாத்தப்பட்டது. இதில் மருதங்கேணி எங்கள் சொத்து இதனை ஒருநாளும் பிரிக்க இடமளிக்க மாட்டோம், தாளையடியில் கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டத்திற்காக எமது பாரம்பரிய நிலங்களை அபகரிக்காதே,  உங்கள் டீலுக்காக தாளையடி கிராமத்தை பிரிக்காதே, மருதங்கேணி எங்கள் பூர்வீக சொத்து, உங்கள் நலனுக்கு எங்கள் பிரதேசம் லஞ்சமா, எல்லை நிர்ணயம் செய்தபோது அயல் கிராமங்களை அழைக்காதது ஏன் என்றவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.அங்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலர்,தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக ஆக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தாளையடி கிராமம் தனியான கிராம சேவகர் பிரிவாக ஆக்கப்படும்போது எல்லைகள் நிர்ணயம் செய்யும் போது தங்களையும் அழைத்துத்தான் எல்லை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.  இதன்போது குறுக்கிட்ட போராட்டகாரர்கள் பிரதேச செயலரினால் யாழ் மாவட்ட செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் கேள்வி எழுப்பினர்.இந்நிலையில் பிரதேச செயலர் பதில் எதுவும் கூற முடியாது அங்கிருந்து விலகிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement