மாஹோ இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1.00 மணியளவில் மட்டக்களப்பு பிரதான ரயில் நிலையத்திற்கு வருகைதந்த புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
புகையிரம் தடம் புரண்டுள்ளதன் காரணமாக புகையிரத நிலையத்திற்கு புகையிரதத்தினை கொண்டுவரமுடியாத நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு நிலைய பொறுப்பதிகாரி பேரின்பராஜா அவர் தெரிவித்தார்.
நாளைய தினம் சேவையினை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாக அதில் வருகைதந்த பயணிகளும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டதால் சேவை முற்றாக பாதிப்பு மாஹோ இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் 1.00 மணியளவில் மட்டக்களப்பு பிரதான ரயில் நிலையத்திற்கு வருகைதந்த புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. புகையிரம் தடம் புரண்டுள்ளதன் காரணமாக புகையிரத நிலையத்திற்கு புகையிரதத்தினை கொண்டுவரமுடியாத நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு நிலைய பொறுப்பதிகாரி பேரின்பராஜா அவர் தெரிவித்தார்.நாளைய தினம் சேவையினை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாக அதில் வருகைதந்த பயணிகளும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.