• Sep 22 2024

மட்டக்களப்பு சிறுவன் மரணம் - மேற்பார்வையாளரான பெண் கைது...!samugammedia

Anaath / Dec 3rd 2023, 4:33 pm
image

Advertisement

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடாத்தப்பட்டு தமக்கு நீதிபெற்றுத்தரவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் 17ஆம் திகதி ஆயலம் ஒன்றில் களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில் மட்டக்களப்பு,கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு குறித்த சிறுவன், நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர்  நீதிவானின் உத்தரவின் பிரகாரம்  அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில்; பாதுகாப்பிற்காக  தங்க வைக்கப்பட்டிருந்த 14வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தவர்   மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சானந் எனும் 14வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சிறுவன்  கடந்த  புதன்கிழமை (29.112023)அதிகாலை 3.30  மணி அளவில் உயிரிழந்து உள்ளதாக தமக்கு  அறிவிக்கப்பட்டதாகவும் சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் மரணத்தில்  சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்ததை அடுத்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் வைக்கப்பட்ட சிறுவனின் சடலம்  அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அங்கு  சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  வழிகாட்டலில்  பொலிஸ் குழுவினர்  குறித்த பாடசாலைக்கு சென்று  தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த சிறுவனை அன்று தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் 25 வயது மதிக்கத்தக்க அப்பாடசாலையில் கடமையாற்றும் மேற்பார்வையாளரான பெண்  கைது செய்யப்பட்டார்.

குறித்த சிறுவன்  தங்க வைக்கப்பட்டிருந்த காப்பகத்தில்  சம்பவ தினமான இரவு  உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர்  என்ன நடந்தது என தெரியவில்லை என முன்னுக்கு பின்னான வாக்குமூலங்கங்கள்  வழங்கியதை தொடர்ந்தே  சந்தேகத்தின் பேரில்  பாடசாலை மேற்பார்வையாளரான அப்பெண்    பொலிஸ் விசாரணைக்காக  கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் சனிக்கிழமை(2) இரவு கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மரணத்தில் பலவிதமான பொய் குற்றச்சாட்டுகளையும்  பாடசாலையின் நிர்வாகம் முன் வைப்பதாகவும் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும்  நாங்கள் எமது   பிள்ளைக்கு நடந்த இதே போன்ற சம்பவங்கள் யாருக்கும் இடம் பெறக் கூடாது என்றும் பிள்ளையின் மரணத்தில் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் மரணம் அடைந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சிறுவன் மரணம் - மேற்பார்வையாளரான பெண் கைது.samugammedia சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடாத்தப்பட்டு தமக்கு நீதிபெற்றுத்தரவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த மாதம் 17ஆம் திகதி ஆயலம் ஒன்றில் களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில் மட்டக்களப்பு,கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு குறித்த சிறுவன், நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர்  நீதிவானின் உத்தரவின் பிரகாரம்  அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில்; பாதுகாப்பிற்காக  தங்க வைக்கப்பட்டிருந்த 14வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தவர்   மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சானந் எனும் 14வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இச்சிறுவன்  கடந்த  புதன்கிழமை (29.112023)அதிகாலை 3.30  மணி அளவில் உயிரிழந்து உள்ளதாக தமக்கு  அறிவிக்கப்பட்டதாகவும் சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் மரணத்தில்  சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்ததை அடுத்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் வைக்கப்பட்ட சிறுவனின் சடலம்  அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.அங்கு  சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  வழிகாட்டலில்  பொலிஸ் குழுவினர்  குறித்த பாடசாலைக்கு சென்று  தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர்.இந்நிலையில் குறித்த சிறுவனை அன்று தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் 25 வயது மதிக்கத்தக்க அப்பாடசாலையில் கடமையாற்றும் மேற்பார்வையாளரான பெண்  கைது செய்யப்பட்டார்.குறித்த சிறுவன்  தங்க வைக்கப்பட்டிருந்த காப்பகத்தில்  சம்பவ தினமான இரவு  உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர்  என்ன நடந்தது என தெரியவில்லை என முன்னுக்கு பின்னான வாக்குமூலங்கங்கள்  வழங்கியதை தொடர்ந்தே  சந்தேகத்தின் பேரில்  பாடசாலை மேற்பார்வையாளரான அப்பெண்    பொலிஸ் விசாரணைக்காக  கைது செய்யப்பட்டிருந்தார்.பின்னர் சனிக்கிழமை(2) இரவு கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.மரணத்தில் பலவிதமான பொய் குற்றச்சாட்டுகளையும்  பாடசாலையின் நிர்வாகம் முன் வைப்பதாகவும் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும்  நாங்கள் எமது   பிள்ளைக்கு நடந்த இதே போன்ற சம்பவங்கள் யாருக்கும் இடம் பெறக் கூடாது என்றும் பிள்ளையின் மரணத்தில் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் மரணம் அடைந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement