• Jul 02 2024

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு அருகில் நடைபெறவுள்ள கறுப்புக் கொடி போராட்டம்!

Chithra / Jun 30th 2024, 8:50 am
image

Advertisement

 

நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளுக்கு அருகாமையில் நாளைய தினம் கறுப்புக் கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேறகொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து நாளைய தினம் கறுப்பு கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.

மேலும் பொலிஸாரின் தாக்குதல்களை எதிர்த்து எதிர்வரும் 2ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு பாடசாலைகளுக்கு எதிரில் ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் இதில் பெற்றோர் இணைந்துகொள்வார்கள் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதல் முற்கொள்ளப்பட்டமை தொடர்பில்,  எதிர்வரும் 4ம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களையும் கொழும்பிற்கு அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தவறினால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் நடத்திய தாக்குதல்களில் 10 ஆசிரியர்கள் காயமடைந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். 

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு அருகில் நடைபெறவுள்ள கறுப்புக் கொடி போராட்டம்  நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளுக்கு அருகாமையில் நாளைய தினம் கறுப்புக் கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேறகொள்ளப்பட்டது.இந்த நடவடிக்கையை எதிர்த்து நாளைய தினம் கறுப்பு கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.மேலும் பொலிஸாரின் தாக்குதல்களை எதிர்த்து எதிர்வரும் 2ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு பாடசாலைகளுக்கு எதிரில் ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் இதில் பெற்றோர் இணைந்துகொள்வார்கள் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் தாக்குதல் முற்கொள்ளப்பட்டமை தொடர்பில்,  எதிர்வரும் 4ம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களையும் கொழும்பிற்கு அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.அரசாங்கம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தவறினால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.பொலிஸார் நடத்திய தாக்குதல்களில் 10 ஆசிரியர்கள் காயமடைந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement