• Sep 08 2024

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி யாழ் பல்கலையில் குருதிக்கொடை...!

Sharmi / May 14th 2024, 12:42 pm
image

Advertisement

கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இன்றையதினம்(14) காலை முதல்  இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கட்டடத் தொகுதியில் இந் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

அதேவேளை பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் குருதிக்கொடை வழங்கி வரும் நிலையில், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் குருதிக் கொடையில் உணர்வுடன் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி யாழ் பல்கலையில் குருதிக்கொடை. கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இன்றையதினம்(14) காலை முதல்  இடம்பெற்று வருகின்றது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கட்டடத் தொகுதியில் இந் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.அதேவேளை பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் குருதிக்கொடை வழங்கி வரும் நிலையில், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் குருதிக் கொடையில் உணர்வுடன் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement