• Sep 20 2024

பொலிவியாவை உலுக்கும் காட்டுத்தீ : அவசர நிலை பிரகடனம்!

Tamil nila / Sep 8th 2024, 6:42 pm
image

Advertisement

பொலிவியாவில் தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிவியாவில் தற்போது 72 காட்டுத் தீ செயலிழந்து வருவதாகவும், இதனால் அழிவடைந்த காடுகளின் அளவு 3 மில்லியன் ஹெக்டேரைத் தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொலிவியாவில் கடந்த சில நாட்களாக கடுமையான காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் தலைநகர் லா பாஸ் உட்பட பல நகரங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளது.

இதன்படி, தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நாட்டில் தேசிய அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சாண்டா குரூஸ் நகரில்தான் அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ பதிவாகியுள்ளது.

தலைநகர் லா பாஸ் நகருக்கு அருகாமையில் காட்டுத் தீ பேரழிவு பதிவாகியுள்ளது, மேலும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.

2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, பொலிவியாவில் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ பதிவாகியுள்ளது.

பொலிவியாவை உலுக்கும் காட்டுத்தீ : அவசர நிலை பிரகடனம் பொலிவியாவில் தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.பொலிவியாவில் தற்போது 72 காட்டுத் தீ செயலிழந்து வருவதாகவும், இதனால் அழிவடைந்த காடுகளின் அளவு 3 மில்லியன் ஹெக்டேரைத் தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.பொலிவியாவில் கடந்த சில நாட்களாக கடுமையான காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் தலைநகர் லா பாஸ் உட்பட பல நகரங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளது.இதன்படி, தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நாட்டில் தேசிய அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சாண்டா குரூஸ் நகரில்தான் அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ பதிவாகியுள்ளது.தலைநகர் லா பாஸ் நகருக்கு அருகாமையில் காட்டுத் தீ பேரழிவு பதிவாகியுள்ளது, மேலும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, பொலிவியாவில் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement