• Feb 17 2026

மூளையை உண்ணும் அமீபா நோய் பாதிப்பு ; 18 நாட்களுக்குள் உயிரிழப்பு அபாயம்!

shanuja / Nov 3rd 2025, 9:20 am
image

மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் நெய்க்லீரியா போலெரி நோய் பாதிப்பு ஏற்பட்டால் 18 நாட்களுக்குள் உயிரிழப்பு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அமீபாவின் செல் உயிரிகள்  ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும். 


ஆறு, ஏரிகளில் மூழ்கிக் குளிக்கும்போது, அரிதாக சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விடும். அதாவது மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்தும். 

 

மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், போதுமான குளோரின் கலக்கப்படாத பொழுதுபோக்கு பூங்காக்களிலும் இந்த அமீபா தொற்று காணப்படுகிறது. 

 

மூளையை உண்ணும் அமீபாவின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை முக்கியமானவை. 

 

அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால், இந்த அறிகுறி தொடங்கிய ஒன்று முதல் 18 நாட்களுக்குள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்பிற்கு வழிவகுக்கும் அபாயம் கொண்டது. 


உடலில் இந்த அமீபா வளரும்போது கழுத்து இறுக்கமாவது, கவனமின்மை, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவையும் ஏற்படக்கூடும். 

 

தொற்று மிகவும் அரிதானது என்பதால், சோதனை மூலம் இதனைக் கண்டறிவது கடினமான ஒன்றாக உள்ளது. 

 

குறித்த நோயிலிருந்து பாதுகாக்க  நன்கு பராமரிக்கப்படாத, தண்ணீர் குறைவாக உள்ள நீச்சல் குளங்களுக்குச் செல்லக் கூடாது. 

 

குளோரின் எனும் கிருமி நாசினி மூலம் நீச்சல் குளங்கள் முறையாகச் சுத்தப்படுத்தப்படுகிறதா என்பதை சரிபார்த்துச் செல்ல வேண்டும். மாசடைந்த குளம் மற்றும் ஏரிகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். 

 

இந்த அமீபா மூக்கு மூலமே உடலுக்குச் செல்கிறது என்பதால் குதித்து மூழ்குவது, சுழியோடுதல் போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். தலையை மேலே வைத்த நிலையில் குளிப்பதன் மூலம் இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மூளையை உண்ணும் அமீபா நோய் பாதிப்பு ; 18 நாட்களுக்குள் உயிரிழப்பு அபாயம் மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் நெய்க்லீரியா போலெரி நோய் பாதிப்பு ஏற்பட்டால் 18 நாட்களுக்குள் உயிரிழப்பு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமீபாவின் செல் உயிரிகள்  ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும். ஆறு, ஏரிகளில் மூழ்கிக் குளிக்கும்போது, அரிதாக சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விடும். அதாவது மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்தும்.  மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், போதுமான குளோரின் கலக்கப்படாத பொழுதுபோக்கு பூங்காக்களிலும் இந்த அமீபா தொற்று காணப்படுகிறது.  மூளையை உண்ணும் அமீபாவின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை முக்கியமானவை.  அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால், இந்த அறிகுறி தொடங்கிய ஒன்று முதல் 18 நாட்களுக்குள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்பிற்கு வழிவகுக்கும் அபாயம் கொண்டது. உடலில் இந்த அமீபா வளரும்போது கழுத்து இறுக்கமாவது, கவனமின்மை, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவையும் ஏற்படக்கூடும்.  தொற்று மிகவும் அரிதானது என்பதால், சோதனை மூலம் இதனைக் கண்டறிவது கடினமான ஒன்றாக உள்ளது.  குறித்த நோயிலிருந்து பாதுகாக்க  நன்கு பராமரிக்கப்படாத, தண்ணீர் குறைவாக உள்ள நீச்சல் குளங்களுக்குச் செல்லக் கூடாது.  குளோரின் எனும் கிருமி நாசினி மூலம் நீச்சல் குளங்கள் முறையாகச் சுத்தப்படுத்தப்படுகிறதா என்பதை சரிபார்த்துச் செல்ல வேண்டும். மாசடைந்த குளம் மற்றும் ஏரிகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.  இந்த அமீபா மூக்கு மூலமே உடலுக்குச் செல்கிறது என்பதால் குதித்து மூழ்குவது, சுழியோடுதல் போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். தலையை மேலே வைத்த நிலையில் குளிப்பதன் மூலம் இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement