• May 04 2024

பெற்ற தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூர மகன்..! Samugammedia

Tamil nila / Dec 26th 2023, 7:22 am
image

Advertisement

மின்சார தூணில் கட்டிவைத்து தாயை மோசமாக தாக்கிய மகனின் செயலால் அதிர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. 

70 வயதான மூதாட்டி தனது மகனின் தோட்டத்தில் இருந்து காலிபிளவரை பறித்ததால் ஆத்திரமடைந்த மகன் மூதாட்டியை மின்கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவின் ஒடிசா மாநிலம் கியாஜ்ஹர் மாவட்டம் சரசபசி கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்தககைய கொடுமையான சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

தனது மகனான சஸ்துருகனின் தோட்டத்தில் விளைந்த கோவாவை தாயான சாரதா சமையலுக்காக பறித்துள்ளார்.

இதனை அறிந்து ஆத்திரமடைந்த மகன் தனது தாயார் சாரதாவை கடுமையாக தாக்கி அருகே இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதேவேளை மாமியாரை காப்பாற்றச் சென்ற மனைவியையும் சஸ்துருகன் தாக்கியுள்ளார். எவராவது தடுத்தால் அவர்களையும் தாக்குவேன் என்று ஊர் மக்களையும் மிரட்டியுள்ளார்.

கடைசியாக சஸ்துருகனிடமிருந்து அவரது தாயார் மற்றும் மனைவியை ஊர் மக்கள் மீட்டனர். 

மகன் தாக்கியதில் படுகாயமடைந்த சாரதா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

குறித்த  சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.  


பெற்ற தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூர மகன். Samugammedia மின்சார தூணில் கட்டிவைத்து தாயை மோசமாக தாக்கிய மகனின் செயலால் அதிர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. 70 வயதான மூதாட்டி தனது மகனின் தோட்டத்தில் இருந்து காலிபிளவரை பறித்ததால் ஆத்திரமடைந்த மகன் மூதாட்டியை மின்கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.இந்தியாவின் ஒடிசா மாநிலம் கியாஜ்ஹர் மாவட்டம் சரசபசி கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இத்தககைய கொடுமையான சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.தனது மகனான சஸ்துருகனின் தோட்டத்தில் விளைந்த கோவாவை தாயான சாரதா சமையலுக்காக பறித்துள்ளார்.இதனை அறிந்து ஆத்திரமடைந்த மகன் தனது தாயார் சாரதாவை கடுமையாக தாக்கி அருகே இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார்.இதேவேளை மாமியாரை காப்பாற்றச் சென்ற மனைவியையும் சஸ்துருகன் தாக்கியுள்ளார். எவராவது தடுத்தால் அவர்களையும் தாக்குவேன் என்று ஊர் மக்களையும் மிரட்டியுள்ளார்.கடைசியாக சஸ்துருகனிடமிருந்து அவரது தாயார் மற்றும் மனைவியை ஊர் மக்கள் மீட்டனர். மகன் தாக்கியதில் படுகாயமடைந்த சாரதா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குறித்த  சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement