நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2025-02-09 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த அமைச்சரவை குறிப்பை கவனத்தில் எடுத்து, தற்போது இனங்காணப்பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இனங்காணப்படும் திருத்தங்களை உள்ளடக்கி மேற்குறித்த சட்டத்தை திருத்தம் செய்வதற்கான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக உயர் நீதிமன்றத்தின் கௌரவ நீதியரசர் ஒருவரின் தலைமையில் தொடர்புடைய அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம். நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2025-02-09 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த அமைச்சரவை குறிப்பை கவனத்தில் எடுத்து, தற்போது இனங்காணப்பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இனங்காணப்படும் திருத்தங்களை உள்ளடக்கி மேற்குறித்த சட்டத்தை திருத்தம் செய்வதற்கான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக உயர் நீதிமன்றத்தின் கௌரவ நீதியரசர் ஒருவரின் தலைமையில் தொடர்புடைய அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.