• Feb 03 2025

கஞ்சா தோட்டங்கள் முற்றுகை - சிக்கிய பலர்

Chithra / Feb 2nd 2025, 2:55 pm
image

  

உடவளவை வனப்பகுதியில் பயிரிடப்பட்டுவந்த கஞ்சா தோட்டமொன்றை உடவளவை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.

அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, சுமார் 4 அடி உயரம் வரை வளர்க்கப்பட்ட 2,153 கஞ்சா செடிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் தனமல்வில பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.


இதேவேளை எத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல பிரதேசத்தில் 3 கஞ்சா தோட்டங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

எத்திமலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 42, 43 மற்றும் 49 வயதுடைய கொட்டியாகல பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

சந்தேக நபர்களினால் 3 கஞ்சா தோட்டங்களில் பயிாிடப்பட்டிருந்த  4,299 கஞ்சா செடிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கஞ்சா தோட்டங்கள் முற்றுகை - சிக்கிய பலர்   உடவளவை வனப்பகுதியில் பயிரிடப்பட்டுவந்த கஞ்சா தோட்டமொன்றை உடவளவை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.இதன்போது, சுமார் 4 அடி உயரம் வரை வளர்க்கப்பட்ட 2,153 கஞ்சா செடிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதானவர் தனமல்வில பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.இதேவேளை எத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல பிரதேசத்தில் 3 கஞ்சா தோட்டங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.எத்திமலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 42, 43 மற்றும் 49 வயதுடைய கொட்டியாகல பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.சந்தேக நபர்களினால் 3 கஞ்சா தோட்டங்களில் பயிாிடப்பட்டிருந்த  4,299 கஞ்சா செடிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement