• May 19 2024

சிங்கள பெண்ணை காதலிக்கும் சாணக்கியன்! புலிகள் பற்றி பேச அவருக்கு உரிமையில்லை! சர்ச்சையை கிளப்பிய மொட்டு எம்.பி

Chithra / Dec 8th 2023, 8:06 am
image

Advertisement



சிங்களப் பெண்ணை காதலித்து, திருமணம் செய்யவுள்ள இரா.சாணக்கியன், நாடாளுமன்றத்தில் போலியாக புலிச் சாயம் போர்த்திக் கொள்வதாக ஆரம்பக் கைத்தொழில்துறை இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 9 எம்.பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை. ஏனெனில், அவரது செயற்பாடுகளும் உறவுகளும் சிங்களவர்களுடன் தொடர்புபட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர்   தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம் தம்மை புலி என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.

இதனை சுட்டிக்காட்டி உரையாற்றுகையிலேயே சாமர சம்பத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சபையில் பேசிய சாணக்கியன் "நான் ஏதாவது கூறினால் என்னை புலி என்று கூறுவீர்கள்'' என்று குறிப்பிட்டார். அவருக்கும் புலிகளுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது.

மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக இருந்தபோது அவரிடம் போய் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக பதவி பெற்றார். ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டார். 

அது மட்டுமல்ல, இவர் கண்டியில் உள்ள சிங்கள பாடசாலையில் தான் கல்வி கற்றார். சிங்கள வீடுகளில்தான் உணவருந்தினார். சிங்களப் பெண்கள்தான் அவரின் தோழிகள். அவர் ஒரு சிங்களப் பெண்ணைத்தான் திருமணமும் செய்யவுள்ளார்.

எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள ஒன்பது உறுப்பினர்களுக்கு மட்டுமே புலிகள் பற்றி பேச உரிமையுண்டு. ஏனெனில், அவர்கள் புலிகளுடன் இருந்தவர்கள், வாழ்ந்தார்கள்.

ஆனால், சாணக்கியனுக்கு தன்னை புலி என்று கூற எந்த தகுதியும் உரிமையும் கிடையாது என்றார்.

சிங்கள பெண்ணை காதலிக்கும் சாணக்கியன் புலிகள் பற்றி பேச அவருக்கு உரிமையில்லை சர்ச்சையை கிளப்பிய மொட்டு எம்.பி சிங்களப் பெண்ணை காதலித்து, திருமணம் செய்யவுள்ள இரா.சாணக்கியன், நாடாளுமன்றத்தில் போலியாக புலிச் சாயம் போர்த்திக் கொள்வதாக ஆரம்பக் கைத்தொழில்துறை இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 9 எம்.பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை. ஏனெனில், அவரது செயற்பாடுகளும் உறவுகளும் சிங்களவர்களுடன் தொடர்புபட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர்   தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம் தம்மை புலி என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.இதனை சுட்டிக்காட்டி உரையாற்றுகையிலேயே சாமர சம்பத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.சபையில் பேசிய சாணக்கியன் "நான் ஏதாவது கூறினால் என்னை புலி என்று கூறுவீர்கள்'' என்று குறிப்பிட்டார். அவருக்கும் புலிகளுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது.மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக இருந்தபோது அவரிடம் போய் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக பதவி பெற்றார். ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டார். அது மட்டுமல்ல, இவர் கண்டியில் உள்ள சிங்கள பாடசாலையில் தான் கல்வி கற்றார். சிங்கள வீடுகளில்தான் உணவருந்தினார். சிங்களப் பெண்கள்தான் அவரின் தோழிகள். அவர் ஒரு சிங்களப் பெண்ணைத்தான் திருமணமும் செய்யவுள்ளார்.எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள ஒன்பது உறுப்பினர்களுக்கு மட்டுமே புலிகள் பற்றி பேச உரிமையுண்டு. ஏனெனில், அவர்கள் புலிகளுடன் இருந்தவர்கள், வாழ்ந்தார்கள்.ஆனால், சாணக்கியனுக்கு தன்னை புலி என்று கூற எந்த தகுதியும் உரிமையும் கிடையாது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement