பிலிப்பைன்ஸில் உள்ள சைபர் மோசடி நிறுவனத்தில் பணிபுரிந்த சீன நாட்டவர் ஒருவர் இன்று (08) காலை 9:45 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் (AK) மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா விசாவின் கீழ் இலங்கையில் வணிக நோக்கத்திற்காக ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வருவதாக சந்தேகநபர் கூறியிருந்தாலும், தனது பதவி குறித்த தெளிவான தகவல்களை வழங்கத் தவறியதால், விமான நிலையத்தின் தலைமை குடிவரவு அதிகாரி அவரை எல்லை கண்காணிப்புப் பிரிவுக்கு அனுப்பி வைத்தார்.
விசாரணையில், பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அவரிடம் கண்டறியப்பட்டதுடன், அவர் பிலிப்பைன்ஸின் பரானாக் பகுதியில் இயங்கிய கணினி மோசடி மையத்தில் பணிபுரிந்தவர் என்பது உறுதியானது.
இந்த மோசடி மையம் தற்போது பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, அதன் காட்சிகள் யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் உலகளவில் பரவியுள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அதன்படி, கட்டுநாயக்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள், இந்த சீன நாட்டவரை அவர் வந்த அதே விமானத்தில் நாடு கடத்துவதற்காக சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன நாட்டவர் நாடு கடத்தல் பிலிப்பைன்ஸில் உள்ள சைபர் மோசடி நிறுவனத்தில் பணிபுரிந்த சீன நாட்டவர் ஒருவர் இன்று (08) காலை 9:45 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் (AK) மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளார். சுற்றுலா விசாவின் கீழ் இலங்கையில் வணிக நோக்கத்திற்காக ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வருவதாக சந்தேகநபர் கூறியிருந்தாலும், தனது பதவி குறித்த தெளிவான தகவல்களை வழங்கத் தவறியதால், விமான நிலையத்தின் தலைமை குடிவரவு அதிகாரி அவரை எல்லை கண்காணிப்புப் பிரிவுக்கு அனுப்பி வைத்தார். விசாரணையில், பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அவரிடம் கண்டறியப்பட்டதுடன், அவர் பிலிப்பைன்ஸின் பரானாக் பகுதியில் இயங்கிய கணினி மோசடி மையத்தில் பணிபுரிந்தவர் என்பது உறுதியானது. இந்த மோசடி மையம் தற்போது பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, அதன் காட்சிகள் யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் உலகளவில் பரவியுள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்தனர். அதன்படி, கட்டுநாயக்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள், இந்த சீன நாட்டவரை அவர் வந்த அதே விமானத்தில் நாடு கடத்துவதற்காக சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.