• Jun 07 2025

அரசுக்கு ஆதரவான நிறுவனமாக மாற்றப்பட்ட சிஐடி - தயாசிறி குற்றச்சாட்டு

Chithra / Jun 6th 2025, 8:43 pm
image

 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

322 கொள்கலன்களை விடுவித்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று (06) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரையும், கொள்கலன்களை விடுவித்த குழுவையும்தான் அழைக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

எனினும், இப்பிரச்சினையை எழுப்பியவர்களுக்கு மட்டுமே அழைப்பாணை அனுப்பப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசாங்கத்திற்கு ஆதரவான நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கும் அரசாங்கத் தரப்பினரைப் பாதுகாப்பதற்கும் இது பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அரசுக்கு ஆதரவான நிறுவனமாக மாற்றப்பட்ட சிஐடி - தயாசிறி குற்றச்சாட்டு  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.322 கொள்கலன்களை விடுவித்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று (06) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இது தொடர்பில், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரையும், கொள்கலன்களை விடுவித்த குழுவையும்தான் அழைக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.எனினும், இப்பிரச்சினையை எழுப்பியவர்களுக்கு மட்டுமே அழைப்பாணை அனுப்பப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசாங்கத்திற்கு ஆதரவான நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கும் அரசாங்கத் தரப்பினரைப் பாதுகாப்பதற்கும் இது பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement