• Jun 26 2025

ஒரு லட்சம் ரூபா இலஞ்சம் வாங்கியவருக்கு 22 ஆண்டுகள் சிறை - கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பு!

shanuja / Jun 25th 2025, 7:40 pm
image

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அரச  அதிகாரி ஒருவருக்கு  22 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தம்புத்தேகம மகாவலி மண்டலத்தில் மரம் வெட்டுவதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக கடந்த  2016 ஆம் ஆண்டு  100,000 ரூபா லஞ்சம் பெற்றதற்காக 

முன்னாள் நில அதிகாரி ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்தால் கைது செய்யப்பட்டார். 


கைது செய்யப்பட்ட அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டார். 


விசாரணைகளை எடுத்துக்கொண்ட கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க, குறித்த அதிகாரிக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்ததுடன் 30,000 ரூபா அபராதமும் விதித்து, இலஞ்சத் தொகையை இலஞ்சச் சட்டத்தின் கீழ் கூடுதல் தண்டனையாக வசூலிக்க உத்தரவிட்டார்.


அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு வருடம் எளிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டது.

ஒரு லட்சம் ரூபா இலஞ்சம் வாங்கியவருக்கு 22 ஆண்டுகள் சிறை - கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பு இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அரச  அதிகாரி ஒருவருக்கு  22 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தம்புத்தேகம மகாவலி மண்டலத்தில் மரம் வெட்டுவதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக கடந்த  2016 ஆம் ஆண்டு  100,000 ரூபா லஞ்சம் பெற்றதற்காக முன்னாள் நில அதிகாரி ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்தால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டார். விசாரணைகளை எடுத்துக்கொண்ட கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க, குறித்த அதிகாரிக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்ததுடன் 30,000 ரூபா அபராதமும் விதித்து, இலஞ்சத் தொகையை இலஞ்சச் சட்டத்தின் கீழ் கூடுதல் தண்டனையாக வசூலிக்க உத்தரவிட்டார்.அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு வருடம் எளிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

Advertisement