கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து நடைபெற்று சுமார் மூன்று வருடங்களாகியும் குறித்த சம்பவத்தில் மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு இதுவரையில் அரசாங்கத்தால் நஷ்ட ஈடு எதுவும் வழங்கப்படாமை தொடர்பாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் இன்று(28) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.கனியை சந்தித்து கலந்துரையாடி படகு விபத்தில் மரணித்த 8 குடும்பங்களுக்கான நஷ்டஈட்டை விரைவாக பெற்று கொடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஏற்பட்ட கால தாமதத்தை கருத்தில் கொண்டு முன்னர் வழங்குவதாக குறிப்பிட்ட தொகையை விட அதிக தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
![](https://samugammedia.com/public/samugam_uploads/17169102560.png)
![](https://samugammedia.com/public/samugam_uploads/17169102561.png)