• Jun 26 2025

பொலனறுவையில் பேருந்து ஊழியர்களிடையே மோதல் - ஐந்து பேர் காயம்!

Chithra / Jun 26th 2025, 11:01 am
image


பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து ஐந்து பேர்  வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இலங்கை போக்குவரத்து சபையின் மூன்று ஊழியர்களும், தனியார் பேருந்து ஊழியர் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறையிலிருந்து பொலன்னறுவை டிப்போவிற்கு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, தனியார் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களையும், வழியில் மாதாந்திர பருவச் சீட்டுகளைப் பெற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு சென்றதால், தனியார் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் இந்த மோதல் ஏற்பட்டது.

தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (26) பேருந்து வேலைநிறுத்தம் செய்யப்போவதாகவும் டிப்போ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து பொலன்னறுவை பொலிஸ் நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பொலனறுவையில் பேருந்து ஊழியர்களிடையே மோதல் - ஐந்து பேர் காயம் பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து ஐந்து பேர்  வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் இலங்கை போக்குவரத்து சபையின் மூன்று ஊழியர்களும், தனியார் பேருந்து ஊழியர் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.மாத்தறையிலிருந்து பொலன்னறுவை டிப்போவிற்கு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, தனியார் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களையும், வழியில் மாதாந்திர பருவச் சீட்டுகளைப் பெற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு சென்றதால், தனியார் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் இந்த மோதல் ஏற்பட்டது.தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (26) பேருந்து வேலைநிறுத்தம் செய்யப்போவதாகவும் டிப்போ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து பொலன்னறுவை பொலிஸ் நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement